பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு முதல் முறையாக அரசு முறை பயணம் சென்றுள்ளதால், இப்பயணம் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இந்த பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், பாதுக்காப்பு துறை சார்ந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
மோடியின் அரசு பயணம் என்பதால் அமெரிக்க அதிபர் மற்றும் அவருடைய மனைவி ஜில் பைடன் அவரை வெள்ளை மாளிகைக்கு முறையாக அழைத்து இரவு விருந்து அளித்தனர். இதற்காக வெள்ளை மாளிகையில் மயில், தாமரை என பல சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க முதல் பெண்மணி டாக்டர் ஜில் பைடன்-ஐ சந்தித்த பிரதமர் மோடி உலகநாடுகள் வியக்கும் வகையில் பெரிய அளவிலான உற்பத்தியில் இறங்கப்பட்டு உள்ள Lab-ல் உருவாக்கப்பட்ட வைரத்தின் மகிமையை உணர்த்தும் வகையில் பரிசு அளித்தார் பிரதமர் மோடி.
இந்தியா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 கேரட் பசுமை வைரத்தை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க முதல் பெண்மணி டாக்டர் ஜில் பைடனுக்கு பரிசளித்தார். அது ஏன் பசுமை வைரம்.
இந்த வைரம் பூமியில் இருந்து வெட்டப்பட்ட வைரங்களின் இரசாயன மற்றும் ஒளியியல் பண்புகளை அப்படியே பிரதிபலிக்கிறது, ஆனால் இது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரம். மேலும் இந்த 7.5 கேரட் வைரத்தை உருவாக்க சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற கிரீன் எனர்ஜி பயன்படுத்தப்பட்டதால், இது பசுமை வைரம் என அழைக்கப்படுகிறது.
மேலும் இந்த வைரத்தை மோடி வெறுமென கொடுக்கவில்லை Papier mâché என சிறப்பு மிக்க பெட்டியில் 7.5 கேரட் வைரம் வைக்கப்பட்டு அளிக்கப்பட்டு உள்ளது. கர்-இ-கலாம்தானி என்று அழைக்கப்படும், காஷ்மீரின் நேர்த்தியான பேப்பியர் மச்சே பெட்டி காகிதக் கூழ் மற்றும் நக்காஷி கலையை உள்ளடக்கி செய்யப்பட்டு உள்ள சிறப்பு மிக்க பெட்டி.
பிரதமர் மோடி கஷ்மீர்-ன் பாரம்பரியமான Papier mâché என சிறப்பு மிக்க பெட்டி மூலம் இந்தியாவின் கலாச்சாரத்தையும், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 கேரட் கொண்ட பெரிய வைரத்தையும் கொடுத்து நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் கிப்ட் கொடுத்துள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications