மத்திய பட்ஜெட்டின்போது, நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், பல முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, 'மைக்ரோ எண்டர்பிரைசஸ் கார்டு' எனப்படும் எம்இ-கார்டு (ME-Card) திட்டமாகும். இத்திட்டம், சிறிய அளவிலான தொழில்கள் தங்கள் அன்றாட நிதித் தேவைகளை எளிதாக நிர்வகிக்க உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
சிறு வணிகர்களுக்கு ரூ. 5 லட்சம் உடனடிக் கடன்: எம்இ-கார்டு (Micro Enterprises Card) மூலம், ரூ. 5 லட்சம் வரை கடன் வசதி கிடைக்கும். சிறு தொழில்கள் அவசரத் தேவைகளுக்காகவும், செயல்பாட்டு மூலதனத்திற்காகவும் வெளியில் வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்த்து, வங்கிகள் மூலம் எளிதில் நிதி பெறுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் கடன் பெறும் நடைமுறைகள் மிகவும் எளிமையானதாகவும் வேகமாகவும் மாறும் என அரசு எதிர்பார்க்கிறது.

யாருக்கு எம்இ-கார்டு கிடைக்கும்..?: இந்தச் சிறப்பு அட்டை, உத்யம் (Udyam) போர்ட்டலில் பதிவு செய்துள்ள மைக்ரோ எண்டர்பிரைசஸ் எனப்படும் மிகச் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். உற்பத்தி, சேவை மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் செயல்படும் சிறு வணிகர்கள் இதில் பயனடையலாம். முதல் ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் எம்இ-கார்டுகளை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
எம்இ-கார்டின் பயன்கள் : ஒரு தொழில் நிறுவனத்திற்குத் தேவையான சரக்குகளை வாங்குவதற்கு உடனடியாக நிதி உதவி கிடைக்கும். தொழில் தொடர்பான தினசரிச் செலவுகள் மற்றும் பிற அத்தியாவசிய வணிகச் செலவுகளைக் கவனிக்க உதவும். வணிகத்தின் செயல்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படும்.
டிஜிட்டல் மற்றும் பாதுகாப்பான செயல்பாடு : இந்த எம்இ-கார்டு, யுபிஐ மற்றும் தேசிய கடன் உத்தரவாதம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுச் செயல்படும். இதன்மூலம் பணம் செலுத்துதல் மற்றும் கடன் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பாதுகாப்பான முறையில், டிஜிட்டல் மயமாக்கப்படும். எனினும், வங்கிகள் தங்கள் சொந்தக் கடன் கொள்கைகளின் அடிப்படையில் கடனைச் செயல்படுத்தும். மேலும், அதற்கான ஒரு சிறிய செயலாக்க கட்டணத்தை வசூலிக்க வாய்ப்புள்ளது.
இந்த புதிய கொள்கை மாற்றங்கள் மற்றும் திட்டங்களின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் சிறு வணிகங்களுக்கு ரூ. 1.5 லட்சம் கோடி கூடுதல் கடன் கிடைக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் MSME துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
கடன் உத்தரவாதம் இரு மடங்கு உயர்வு : வங்கிகள் சிறு வணிகங்களுக்கு எளிதாகக் கடன் வழங்குவதற்கு ஊக்கமளிக்கும் விதமாக, கடன் உத்தரவாத வரம்பு ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வங்கிகள் அதிக நம்பிக்கையுடன் அதிக அளவிலான கடன்களை வழங்க முடியும். ஏற்றுமதியை இலக்காக கொண்ட சிறு, குறு நிறுவனங்கள், உலகச் சந்தையில் தங்களை விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்கில், இனி ரூ. 20 கோடி வரை டேர்ம் லோன் பெற முடியும். இது, இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், உள்நாட்டு வணிகங்கள் பன்னாட்டு அளவில் போட்டியிடத் தகுதி பெறுவதற்கும் உதவும் ஒரு முக்கிய அம்சமாகும்.
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான வரையறையில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இந்தத் துறையின் கீழ் உள்ள சலுகைகளை மேலும் வளர்ந்து வரும் நிறுவனங்கள் பெற உதவும் வகையில், முதலீட்டு வரம்பு 2.5 மடங்கும், வருவாய் வரம்பு 2 மடங்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வளர்ந்து வரும் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் அரசின் ஆதரவு மற்றும் சலுகைகளைப் பெற முடியும்.
More From GoodReturns

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

தொடர்ந்து 2ஆவது நாளாக விலை சரிந்த தங்கம்..!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications