'ஜன் தன் 3.0' மோடி அரசின் புதிய திட்டம்..!

இந்தியாவில் அனைவருக்கும் அனைத்து வங்கி சேவைகளும் கிடைக்க வேண்டும் அதன் மூலம் அதிகப்படியான வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியும் என்பதைப் பெரிய அளவில் மத்திய அரசு நம்பும் நிலையில், மத்திய அரசு 3வது முறையாக மாபெரும் நிதி உள்ளடக்கத் திட்டத்தைத் தீட்டி வருகிறது.

மத்திய அரசின் ஜன் தன் யோஜனா பெரிய அளவிலான மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்தியது மறுக்க முடியாத உண்மை, ஆனால் இதன் மூலம் மக்களுக்குச் சில சுமையும் உருவானது மறுக்க முடியாது குறிப்பாக ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு.

இந்நிலையில் மத்திய அரசு சில முக்கியமான திட்டத்துடன் ஜன் தன் 3.0 திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

 5 மாநில தேர்தல்

5 மாநில தேர்தல்

5 மாநில தேர்தல் நடக்க உள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பில் துவங்கி, குளிர்காலக் கூட்டத்தொடரில் 26 மசோதா, பட்ஜெட் எனப் பல முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடக் காத்திருக்கிறது. இந்த நிலையில் மக்களுக்குக் கிடைக்கும் நிதியியல் சேவையைப் பெரிய அளவில் மேம்படுத்த ஜன் தன் 3.0 திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

 ஜன் தன் 3.0 திட்டம்

ஜன் தன் 3.0 திட்டம்

ஜன் தன் 3.0 திட்டத்தில் டோர் ஸ்டெப் பேங்கிங், டிஜிட்டல் பைனான்சியல் திட்டங்கள், பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் திட்டத்தில் ஒன்றிணைப்பு எனப் பல முக்கியத் திட்டத்தை முக்கிய இலக்காகக் கொண்டு உள்ளது.

 5 கிலோமீட்டர் தூரம்

5 கிலோமீட்டர் தூரம்

அனைத்திற்கும் மேலாக நாடு முழுவதும் 5 கிலோமீட்டர் தொலைவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கு வங்கி அல்லது நிதியியல் சேவை கிடைக்கும் தளத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும்
ஜன் தன் 3.0 திட்டம் குறித்து அரசு அதிகாரி கூறுகையில் வங்கிகளுடன் இணைந்து டிஜிட்டல் கடன் விண்ணப்பங்கள், ரீடைல், MSME, விவசாயக் கடன்களை எளிதாகப் பெறக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் ஈடுபட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

 ஜன் தன் வங்கி கணக்கு

ஜன் தன் வங்கி கணக்கு

மேலும் வங்கிகளை மத்திய அரசு ஜன் தன் வங்கி கணக்குகளுடன் அடல் பென்ஷன் யோஜனா, பிரதமர் ஸ்வாநிதி, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகிய திட்ட இணைப்பு குறித்தும் ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளது.

 அதிகப்படியான சலுகை

அதிகப்படியான சலுகை

அதாவது ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் கட்டமைப்பு மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான சலுகையும், கவரேஜ் திட்டத்தையும் அளிக்க முடியும் என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் மக்களுக்கு மட்டும் அல்லாமல் வங்கிகளுக்கும் அதிகப்படியான வர்த்தகம் கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+