மத்திய அரசு பாரத்நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 6.4 லட்சம் கிராமங்களுக்கு அதிவேக பிராட்பேண்ட் இண்டர்நெட் சேவைக்காக 1.39 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று அரசு உயர் அதிகாரி ஈடி பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது பிராட்பேண்ட் இணைப்பு திட்டம் ஏற்கனவே 1.94 லட்சம் கிராமங்களை இணைக்கப்பட்டு உள்ள நிவையில் மீதமுள்ளவை இரண்டரை ஆண்டுகளில் முடிக்கப்படும். இதற்கான நிதிஒதுக்கீட்டை தான் தற்போது மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் அளித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில், நாட்டின் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கு ஆப்டிகல் ஃபைபர் வாயிலாக அதிவேக இண்டர்நெட் இணைப்பை வழங்குவதற்காக 1,39,579 கோடி ரூபாய்க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மத்திய அரசு பாரத்நெட் திட்டத்தில் தற்போது மேம்படுத்தப்பட்ட முறையில் செயல்பட உள்ளது, கிராம அளவிலான தொழில்முனைவோரைப் பயன்படுத்தி, அவர்களது கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு இணைப்பை எடுத்துச் செல்லவும், பராமரிப்புக்காகவும் முழுப் பொறுப்புடன் அவர்களைப் பார்ட்னராக அமர்த்த உள்ளது.
இதன் மூலம் உள்ளூர் தொழில்முனைவோருக்கு பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (BBNL) மூலம் ரூட்டர்கள் மற்றும் கூடுதல் ஃபைபர் ஆப்டிக் கேபிள் உள்ளிட்ட தேவையான உபகரணங்கள் வழங்குவார்கள். மேலும் ஆப்டிக்கல் ஃபைபர்-ஐ எவ்வாறு பிரிப்பது மற்றும் வீடுகளில் எவ்வாறு இணைப்புகளை அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என தெரிகிறது.
இந்த கட்டமைப்பில் அரசுடன் பார்ட்னராகும் தொழில்முனைவோர்-க்கு 50% வருவாயை பகிர்ந்து அளிக்கப்படும். இதன் மூலம் ஒரு வீட்டுக்கான இணைப்புக்கு ரூ.399 திட்டத்திற்கு சந்தா செலுத்தினால், அதில் ரூ.199-ஐ தொழில்முனைவோர் பெறுவார்கள். இத்திட்டம் மூலம் 2.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications