இந்தியாவில் அதிகளவிலான உற்பத்தியை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய மாடல்களான ஐபோன் 13 சீரியஸ் போன்களைத் தயாரிக்கத் துவங்கியுள்ள வேளையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியமான கோரிக்கையை ஆப்பிள் நிறுவனத்தின் முன் வைத்துள்ளது.
மோடி அரசு
மத்திய அரசு இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை அதிகரிக்கவும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளது. இந்த இலக்கை அடைய பல PLI திட்டம் உட்படப் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது.
ஆப்பிள், சியோமி, சாம்சங்
இந்தியாவில் தற்போது ஆப்பிள் மட்டும் அல்லாமல் சியோமி, சாம்சங் உட்படப் பல மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை இந்தியாவில் செய்து வருகிறது, ஆனால் ஆப்பிள் நிறுவனம் கொஞ்சம் மத்திய அரசுக்கு ஸ்பெஷல்.
ஆப்பிள் உற்பத்தி
இந்தியாவில் பிற நிறுவனங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரித்தாலும் இதில் பெரும் பகுதி இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது, ஆனால் ஆப்பிள் உற்பத்தியில் பெரும் பகுதி வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்திற்குப் பெரிய அளவில் நன்மை அளிக்கிறது.
50 பில்லியன் டாலர்
இந்த நிலையில் தான் மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த 5-6 வருடத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய உற்பத்தியை 50 பில்லியன் டாலர் வரையில் உயர்த்தும் திட்டத்தை முன்வைத்துள்ளது.
ஐபோன் மட்டும் போதாது
இந்த இலக்கை அடைய ஆப்பிள் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் மட்டும் அல்லாமல் மேக்புக், ஐபேட், ஏர் பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றையும் தயாரிக்கத் துவங்க வேண்டும் எனவும் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
டிம் குக்
டிம் குக் தலைமையில் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தை இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் உற்பத்தி இன்ஜின் ஆக மாற்ற வேண்டும் என முக்கியமான திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது.
ஆலோசனை
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உடன் அரசு அதிகாரிகள், முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்ட சந்திப்பில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு ஆப்பிள் நிறுவனம் சீனாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் செய்த அதே மேஜிக்-ஐ இந்தியாவில் உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது.
பாக்ஸ்கான், விஸ்திரான், பெகாட்ரன்
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கூட்டணி நிறுவனங்களான பாக்ஸ்கான், விஸ்திரான், பெகாட்ரன் ஆகிய 3 முக்கிய நிறுவனங்களும் இந்தியாவில் இருக்கும் காரணத்தால் 50 பில்லியன் டாலர் இலக்கை அடைவதும் உற்பத்தியை மேம்படுத்துவதும் கஷ்டமான விஷயம் இல்லை.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications