இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு 2023 நடைபெற உள்ளது. இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8-10 ஆம் தேதி வரை பொது விடுமுறையை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
25 நாடுகளுக்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க தங்களது பிரதிநிதிகளுடன் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளனர். விருந்தினர்கள் தங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. டெல்லியில் இப்போதே பல விருந்தினர்கள் வந்துவிட்டதால் நகரம் களைகட்டத் தொடங்கி விட்டது.

ஜி20 மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக பணத்தை மத்திய அரசு வாரி இறைத்து வருகிறது. தலைவர்கள் பாதுகாப்புக்காக குண்டு துளைக்காத 50 ஆடி கார்களை வாங்குவதற்கு ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் இருந்து 50 குண்டுதுளைக்காத லெப்ட்ஹாண்டு டிரைவ் ஆடி கார்களை வெளியுறவுத் துறை மூலம் மத்திய அரசு இறக்குமதி செய்துள்ளதாக டெல்லி போலீஸின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக எந்த மாடல் ஆடி கார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் ஆடி ஏ8 எல் செக்யூரிட்டி என்ற மாடலாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
இதன் முந்தைய புல்லட் புரூப் செடான் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் விலை ரூ.9 கோடி. புதிய மாடல் காரின் விலை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஜெர்மனியில் இருந்து புல்லட் புரூப் கார்களை இந்திய அரசு இறக்குமதி செய்திருந்தாலும் அவை மானிய விலையில் வாங்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் கார்களின் மொத்த விலை ரூ.400 கோடி.
சிறப்பு அணிவகுப்பு கார்களை இயக்குவதில் டெல்லி போலீஸாருக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் லெப்ட்ஹாண்டு டிரைவ் வாகனத்தை ஓட்டுவது சட்டவிரோதமாகும். இந்த சட்டச் சிக்கலைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் நாட்டில் ரைட் ஹாண்டு டிரைவ் சாலைகள் இருக்கும் பட்சத்தில் லெப்ட் ஹாண்டு டிரைவ் கார்கள் எப்படி பாதுகாப்பாக செல்ல முடியும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில்தான் ரைட் ஹாண்டு டிரைவ் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications