பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதி பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்திய நிலையில், தற்போது இதன் அளவை குறைத்து ரிலையைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற தனியார் எரிபொருள் ஏற்றுமதி நிறுவனத்திற்குத் தளர்வு அளித்துள்ளது.
மத்திய அரசு இந்திய மக்களுக்குக் குறிப்பாக ரீடைல் சந்தையில் மக்களுக்குப் போதுமான எரிபொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள் மீதான வரியை அதிகரித்தது.
இந்த அறிவிப்பு வெளியான போது இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யும் அனைத்து நிறுவனப் பங்குகளும் சரிந்தது.
மத்திய நிதியமைச்சகம்
ஜூலை 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 13 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதேபோல் பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 6 ரூபாயும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
அரசுக்குக் கூடுதல் வருமானம்
இந்த வரி உயர்வின் மூலம் நடப்பு நிதியாண்டில் மட்டும் மத்திய அரசுக்கு எரிபொருள் ஏற்றுமதி தற்போது இருக்கும் அளவு தொடர்ந்தால் சுமார் 12 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும், அதாவது 94,800 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது.
எதிர்ப்பு
ஆனால் இதேவேளையில் எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவிய வேளையில் மத்திய நிதியமைச்சர் இந்த வரி விதிப்பை மறு ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து 19 நாட்களுக்குப் பின்பு இன்று இந்த ஏற்றுமதி வரி விதிப்பு குறைக்கப்பட்டு உள்ளது.
வரித் தளர்வு
இன்று வெளியான மத்திய அரசின் அறிவிப்பில் டீசல் மற்றும் விமான எரிபொருள் மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரியில் 2 ரூபாய் குறைக்கப்பட உள்ளது, இதேபோல் பெட்ரோல் மீது விதிக்கப்பட்ட 6 ரூபாய் ஏற்றுமதி வரியை மொத்தமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி
இதேபோல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் வரியை ஒரு டன்னுக்கு 27 சதவீதம் குறைத்து 17,000 ரூபாயாகக் குறைத்துள்ளது. இந்தியாவில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான கச்சா எண்ணெய் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மத்திய அரசு ஏற்றுமதி குறைப்பிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் முக்கிய காரணமாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்த வரித் தளர்வுகள் மூலம் இந்தியாவின் முன்னணி எரிபொருள் ஏற்றுமதி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப் (ONGC) நிறுவனம் பெரிய அளவில் பலன் அடைய உள்ளது.
ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி
ரிலையன்ஸ் மற்றும் ரோஸ்நேப்ட் ஆதரவு நயாரா எனர்ஜி லிமிடெட், இந்தியாவின் ஒரே தனியாருக்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிறுவனங்கள், இந்தியாவின் ஒட்டுமொத்த பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியில் 80% முதல் 85% வரையிலான ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வரித் தளர்வு ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி-க்கு ஜாக்பாட் தான்.
விண்ட்ஃபால் டாக்ஸ்
விண்ட்ஃபால் டாக்ஸ் (windfall tax) என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தொழில்துறைக்கு திடீரென அதிகப்படியான லாபம் கிடைக்கும் போது, இதில் இருந்து அரசு கூடுதலான வரி வருமானத்தை பெற விதிக்கப்படும் அதிகப்படியான வரி.
மார்ச் காலாண்டில் ONGC போன்ற கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பேரலுக்கு 139 டாலராக ஆக உயர்ந்தது.
இதில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள்-ம் அடக்கம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications