பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் நாட்டின் தற்போதைய பணவீக்கத்தின் அடிப்படையில் அகவிலைப்படியை 4 சதவீதம் வரையில் உயர்த்த திட்டமிட்டுள்ளது, இதோடு அகவிலைப்படி விலக்கு அளவீட்டையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான இறுதி அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வரும் பட்சத்தில் சுமார் 50 லட்ச அரசு ஊழியர்களும், 61 லட்ச ஒய்வூதியதாரர்களும் பெரிய அளவிலான நன்மையை அடைவார்கள்

மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ள படி அகவிலைப்படியில் 4 சதவீதம் உயர்த்தும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது இருக்கும் 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயரும். மேலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகும் பட்சத்தில் ஜனவரி 2021 முதல் இது அமலாக்கம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு ஊழியர்கள் அமைப்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் அரசு ஊழியர்களுக்கு நாட்டின் 28 சதவீத பணவீக்கத்தின் அடிப்படையில் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் வாயிலாகவே தற்போது அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஏப்ரல் 2020ல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த திட்டமிடப்பட்ட நிலையில் கொரோனா தொற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பாதிப்புத் தற்காலிகமாக ஒத்துவைத்தது. இதனால் 50 லட்ச ஊழியர்களும், 61 லட்ச ஒய்வூதியதாரர்களும் இதற்கான பலனை அனுபவிக்க முடியாமல் போனது.
இதனால் ஒரு வருட காலத்திற்கான அகவிலைப்படி வருமானத்தை ஊழியர்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications