பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சொத்துகள் மற்றும் நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல், நீண்ட காலக் குத்தகை ஒப்பந்தம் வாயிலாக நாட்டின் வளர்ச்சி திட்டத்திற்கான நிதியை சேர்க்க மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது.
இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தனியார்மயமாக்கல் திட்டத்தில் முக்கியமான முடிவை எடுத்துள்ளது மத்திய அரசு.
எல்ஐசி ஐபிஓ
இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ மற்றும் ஐபிஓ-வில் கணிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாத காரணத்தால் 9 சதவீத தள்ளுபடி விலையில் செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்டது. இது மத்திய அரசின் பல கனவுகளுக்குப் பெரும் தடையாக விளங்குகிறது.
பாரத் பெட்ரோலியம்
எல்ஐசி ஐபிஓ கிட்டதட்ட தோல்வி என்று அறிவிக்கும் நிலையில், மத்திய அரசின் முக்கியமான திட்டமாக விளங்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. என்ன காரணம் தெரியுமா..?
மத்திய அரசு
இந்திய ரீடைல் எரிபொருள் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பனை செய்வது மூலம் அதிகப்படியான நிதியும் கிடைக்கும், இந்நிறுவனத்தை வாங்க இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மத்தியில் அதிகப்படியான போட்டி இருக்கும் எனக் கணிக்கப்பட்டது.
3 நிறுவனங்கள்
ஆனால் தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைக் கைப்பற்ற 3 நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பம் கொடுத்த நிலையில், 2 நிறுவனங்களால் வங்கிகளிடம் இருந்து நிதி உத்தரவாதத்தைப் பெற முடியாத காரணத்தால் 2 விண்ணப்பதாரர்கள் ஆரம்பக்கட்டத்திலேயே வெளியேறிய நிலையில், இறுதியில் ஒரு விண்ணப்பதாரர் மட்டுமே இருந்த காரணத்தால் தனியார்மயமாக்கல் திட்டத்தைக் கைவிட்டது மத்திய அரசு.
அனில் அகர்வாலின் வேதாந்தா
மத்திய அரசு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டு உள்ளது என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைக் கைப்பற்ற தேர்வு பெற்ற ஓரே ஒரு நிறுவனம் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications