டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடன் நட்பு பாராட்டினாலும் , இந்திய பொருட்களுக்கு போட்டி வரி விதிப்பதில் திட்டவட்டமாக இருக்கிறார். இந்தியா அமெரிக்க பொருள்களுக்கு அதிகபட்ச வரியை விதிப்பதாக அவர் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் போட்டி வரி விதிப்போம் என அவர் பதவியேற்றதிலிருந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த சூழலில் தான் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு எப்படி அதிகபட்ச வரியை விதிக்கிறதோ அதற்கு போட்டியான தொகை அமெரிக்காவில் வரியாக விதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்றது முதலே டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகப்படுத்தி வர்த்தகப் போரை தொடங்கியுள்ளார். ஏப்ரல் மாதம் முதல் அது மேலும் தீவிரமடைய இருக்கிறது. இதனால் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு என்ன ஆகுமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த சூழலில் டிரம்ப் நிர்வாகத்தை சமாதானப்படுத்தும் முயற்சியாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட சில அமெரிக்க பொருளுக்கு இதுநாள் வரை விதிக்கப்பட்டு வந்து இறக்குமதி வரியை குறைப்பதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான செய்தியை எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு என்னென்ன பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை ஆய்வு செய்து வரும் அரசு இதில் நான்கிலிருந்து ஐந்து பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மின்னணு சாதனங்கள் ,ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் , விமானம் , பாராசூட் மற்றும் கப்பல்கள் உள்ளிட்டவைக்கு இந்தியா தற்போது 7.5 முதல் 10% வரை இறக்குமதி வரி விதிக்கிறது.
இந்த பட்டியலில் சில பொருட்கள் மீதான வரியை குறைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர டிரம்ப் நிர்வாகத்தை சமாதானப்படுத்தவும் இரு நாட்டு வர்த்தக உறவை மேம்படுத்தவும் பல்வேறு வழிமுறைகளை அரசு ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தான் மத்திய அரசு போர்பன் விஸ்கி மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது.
மேலும் கூகுள் ,பேஸ்புக் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் டிஜிட்டல் விளம்பரம் வழங்கி அதன் மூலம் ஈட்டும் வருமானத்திற்கு விதிக்கப்பட்டு வந்த கூகுள் வரி எனப்படும் வரியையும் நீக்க முடிவு செய்தது.
More From GoodReturns

15 நாட்களில் 40% மேல் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை: ஈரான் போர் முடிவது தான் தீர்வா?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

அமெரிக்காவின் அடிமடியில் கை வைக்கும் IRAN..!! கூகுள், மைக்ரோசாப்ட், IBM-ஐ கட்டம் கட்டி அடிக்க முடிவு..!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் 7 அதிரடி வரி மாற்றங்கள்: உங்கள் பாக்கெட்டை பதம் பார்க்க போகிறதா?

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

வருமானத்தை மறைத்த உணவகங்கள்: சிக்கிய 63,000 உணவகங்கள்! IT டிபார்ட்மெண்ட் அனுப்பிய நோட்டீஸ்!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications