நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எரிபொருள் விற்பனையில் அதிகப்படியான வரியை விதித்துப் பெரிய அளவிலான வரி வருமானத்தைப் பார்த்து வரும் நிலையில், தற்போது ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள் மீதான விண்ட்பால் டாக்ஸ்-ஐ உயர்த்தியுள்ளது.
இந்த வரி மாற்றங்கள் இந்திய ரீடைல் சந்தையில் ரிடைல் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
மத்திய அரசு
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 6 மாத சரிவை எட்டியுள்ள வேளையில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் பெட்ரோலியம் க்ரூட்-க்கான விண்ட்பால் டாக்ஸ் ஒரு டன்னுக்கு 17,750 ரூபாயில் இருந்து 13000 ரூபாயாகக் குறைந்துள்ளது.
விண்ட்பால் டாக்ஸ்
ஆனால் டீசல் ஏற்றுமதியில் விண்ட்பால் டாக்ஸ் அளவை அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் ஏற்றுமதிக்கு 5 ரூபாயாக இருந்த விண்ட்பால் டாக்ஸ் 7 ரூபாயாக உயர்த்தியது. இதேபோல் விமான எரிபொருள் ஏற்றுமதி வரியும் லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது. இது மத்திய அரசின் விண்ட்பால் டாக்ஸ் விதிப்பில் 3 வது மாற்றமாகும்.
ஏற்றுமதி
இதேவேளையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான விண்ட்பால் டாக்ஸ் அளவு குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வரும் நிலையில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
பென்ச்மார்க் கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் பென்ச்மார்க் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 100-103 டாலரில் இருந்து 91.51 டாலராகக் குறைந்துள்ளது. மத்திய அரசு விண்ட்பால் டாக்ஸ் போடும் போது முதலில் கச்சா எண்ணெய்-க்கு 23,350 ரூபாயாக விதித்தது. ஜூலை 20 ஆம் தேதி மாற்றத்தில் இதை 17000 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
புதிய வரி
மேலும் இப்புதிய வரி மாற்றங்கள் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், கச்சா எண்ணெய் மீது சர்வதேசச் சந்தை விலை மாற்றத்திற்கு ஏற்ப விண்ட்பால் டாக்ஸ் குறைக்கப்பட்டு வருகிறது.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications