இந்தியாவில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டி வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு, தற்போது அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள், நிலம், கட்டிடங்கள் ஆகியவற்றைப் பணமாக்கும் திட்டத்தைச் சில மாதங்களுக்கு முன் தேசிய பணமாக்கல் பைப்லைன் (National Monetisation Pipeline) திட்டத்தை உருவாக்கியது.
இந்நிலையில் இந்த மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், அரசுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டிடங்களைத் திறம்பட நிர்வாகம் செய்து பணமாக்க புதிய நிறுவனத்தை மத்திய அரசு துவங்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெற்றுள்ளது.
நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தேசிய நிலப் பணமாக்கக் கழகம் (என்எல்எம்சி) என்னும் புதிய நிறுவனத்தை அரசுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டிடங்களைப் பணமாக்கும் புதிய நிறுவனத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
தேசிய நிலப் பணமாக்கக் கழகம்
தேசிய நிலப் பணமாக்கக் கழகம் (என்எல்எம்சி) என்பது மத்திய அரசின் சொந்தமான நிறுவனமாக விளங்கும். இந்நிறுவனத்தைத் துவங்க ஆரம்ப அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனமாக 5000 கோடி ரூபாயும் மற்றும் 150 கோடி ரூபாய் paid-Up பங்கு மூலதனத்துடன் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்
தேசிய நிலப் பணமாக்கக் கழகம் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSE) மற்றும் பிற அரசு நிறுவனங்களின் உபரி நிலம் மற்றும் கட்டிட சொத்துக்களைக் கைப்பற்றிப் பணமாக்கும் பணிகளை மேற்கொள்ளும். இந்தத் திட்டம் குறித்து 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
3400 ஏக்கர் நிலம்
தேசிய நிலப் பணமாக்கக் கழகம் மூலம் மத்திய அரசிடம் பயன்படுத்தாத மற்றும் அதிகளவில் பயன்படுத்த முடியாமல் வைத்திருக்கும் சொத்துக்களைத் தனியாருக்குக் கொடுத்தும் பணமாக்க உள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு. மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSE) கீழ் சுமார் 3400 ஏக்கர் நிலம் உள்ளது.
என்ன லாபம்
இதன் மூலம் தனியார் துறை முதலீடுகள் அதிகரிக்கும், புதிய பொருளாதார நடவடிக்கைகள் உருவாகும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படும் மற்றும் பொருளாதார மற்றும் சமூக உள்கட்டமைப்பிற்கான நிதி ஆதாரங்களை உருவாக்கும் போன்ற தூண்டுவதற்கு, பயன்படுத்தப்படாத இந்தச் சொத்துக்கள் மூலம் உருவாக்க முடியும்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications