இந்திய ஸ்மார்ட்போன் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பெரிதும் சிறிதுமாக ஏகப்பட்ட நிறுவனங்கள் இருந்தாலும், சீனா நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் பல பிரிவுகளில் மிகப்பெரிய ஆதிக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வருடங்களாகவே இந்தியாவில் இயங்கி வரும் சீன நிறுவனங்கள் பல்வேறு முறைகேடுகள் செய்வது கண்டுப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அமலாக்க துறை உட்பட பல அரசு அமைப்புகள் இந்தியாவில் இயங்கி வரும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் செய்த ஆய்வில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் கொண்ட வங்கி கணக்குகளை முடக்கப்பட்டு உள்ளது, இந்த தொகையை திரும்ப பெற பல வழக்குகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு முக்கியமான கண்டிஷன்களை வைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களை தங்களுடைய இந்தியா வர்த்தகத்தில் இந்திய நிறுவனங்களை பங்கு கூட்டாளராக சேர்த்துகொண்டு இயங்க வேண்டும் என்ன கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
அதாவது இந்தியாவில் இயங்கி வரும் சியோமி, ஓப்போ, ரியல்மீ, விவோ ஆகியவை இந்தியாவில் தனது வர்த்தகத்தை தனியாக செய்ய முடியாது, இந்திய நிறுவனங்களின் கூட்டணி அடிப்படையில் தான் செய்ய முடியும், மத்திய அரசு இந்த கண்டிஷன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை, இதேபோல் இந்த விதிமுறை எப்போது வரும் எனவும் தெரியவில்லை.
இது மட்டும் அல்லாமல் மத்திய அரசு சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் இந்திய வர்த்தகத்தில் hief executive officer, chief operating officer, chief financial officer மற்றும் chief technical officer பதவிகளில் இந்தியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல் உள்நாட்டு உற்பத்தியிலும் இந்திய நிறுவனங்கள் கூட்டணியும், உதிரிபாகங்கள் அளவிலான உற்பத்தி இந்திய நிறுவனங்கள் உடன் கூட்டணி சேர்ந்து உற்பத்தி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிலித்து.
மேலும் சீன நிறுவனகங்கள் இந்தியாவில் தனது டிஸ்ட்ரிபியூஷன்-ஐ இந்திய நிறுவனங்களை பயன்படுத்தவும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதியை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் வரி ஏய்ப்பை தடுக்க இந்திய அரசு விதிமுறைகள் உடன் வேகமாக இணங்கவும் அரசு தரப்பில் இருந்து Xiaomi, Oppo, Realme, Vivo நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications