இந்தியா AI இம்பேக்ட் உச்சி மாநாடு 2026 மிகப்பெரிய அளவில் நடந்து வருவது மட்டும் அல்லாமல் உலகளவில் பல பகுதிகளில் இருந்து டெக் நிபுணர்களும், டெக் தலைவர்களும் டெல்லி வந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று சந்தித்துப் பேசினார். உலகத் தலைவர்கள் செயற்கை நுண்ணறிவின் (AI) ஆளுமை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து விவாதிக்கும் முக்கிய தளமாக இந்த மாநாடு திகழ்கிறது.
மாநாட்டில் கலந்துகொள்ளவும், பிப்ரவரி 20 அன்று இக்கூட்டத்தில் முக்கிய உரையாற்றவும் டெல்லி வந்திருந்த சுந்தர் பிச்சை, இந்தியா வந்தடைந்ததும் X தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "இந்தியா AI IMPACT மாநாட்டிற்காக இந்தியா வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வழக்கம் போல் ஒரு அன்பான வரவேற்பு கிடைத்தது" என அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறும் இம்மாநாடு, 110-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 30 சர்வதேச அமைப்புகளிலிருந்து டெக் துறையை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். இதனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஹோட்டல், உணவகம் பிசியாக உள்ளது. ஹோட்டல்களில் ரூம் வாடகை 4-5 மடங்கு அதிகரித்துள்ளது.

அரசுத் தலைவர்கள், அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரும் இந்த உச்ச மாநாட்டில் பங்கேற்கும் காரணத்தால் ஒட்டுமொத்தமாக இந்திய ஏஐ துறை வலுப்பெற்றுள்ளது. இந்த மாநாடு இந்திய ஏஐ துறை வளர்ச்சியின் முக்கிய படியாகவும், பெரிய முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் இந்திய ஏஐ நிறுவனங்கள் தனது ப்ராடெக்ட்களையும், சேவைகளையும் உலக நாடுகளில் இருந்து வந்துள்ள டெக் நிபுணர்களுக்கு காட்டி வருகின்றனர்.
மேலும் பல நிறுவனங்கள் ஏஐ துறையில் திறன்வாய்ந்த வல்லுனர்களை பணியில் சேர்க்க ஒரு ஆட்சேர்ப்பு தளமாகவும் இந்த ஏஐ இம்பேக்ட் கூட்டத்தை பார்க்கிறது.
ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடி, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு செயற்கை நுண்ணறிவு சவால்களையும், மிகப்பெரிய வாய்ப்புகளையும் அளிப்பதாகக் கூறினார்.
மேலும், "செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்படும் புதிய அலைகள் மற்றும் துறை சார்ந்த ஆட்டோமேஷன் உத்திகள் காரணமாக, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை 2030-க்குள் 400 பில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என்று AI சந்தை கணிப்புகள் காட்டுகின்றன," எனவும் அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

தொடர்ந்து 2ஆவது நாளாக விலை சரிந்த தங்கம்..!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டது எப்படி? வெளிச்சத்துக்கு வந்த அமெரிக்க- இஸ்ரேல் கூட்டு சதி!!



Click it and Unblock the Notifications