புதிய வருமான வரி தளத்திற்காக "இன்போசிஸ்" பெற்ற தொகை இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்போசிஸ் உருவாக்கிய புதிய வருமான வரித் தளம் ஆரம்பம் முதல் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் நேரடியாக இன்போசிஸ் நிறுவனத்தைக் குற்றம்சாட்டினார். இதனால் மக்கள் மத்தியில் இன்போசிஸ் மீதான நம்பிக்கை குறைந்தது.

 

ஏற்கனவே இன்போசிஸ் பணியாற்றிய சில முக்கிய இணையதளத்திலும் இதேபோன்ற பிரச்சனை இருந்த நிலையில், ஏன் மீண்டும் வருமான வரித் தளத்தைக் கட்டமைக்கும் திட்டத்தைக் கொடுத்து என மக்கள் அரசைக் கேள்வி எழுப்பினர்.

ஏற்றத்தில் சந்தைகள்.. சென்செக்ஸ் 53,000க்கு கீழ் வர்த்தகம்.. முதலீட்டாளார்களுக்கு நல்ல வாய்ப்பு..! ஏற்றத்தில் சந்தைகள்.. சென்செக்ஸ் 53,000க்கு கீழ் வர்த்தகம்.. முதலீட்டாளார்களுக்கு நல்ல வாய்ப்பு..!

இதேவேளையில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு வருமான வரி தளம் உருவாக்கக் கொடுக்கப்பட்ட பல நூறு கோடி ரூபாய் மக்கள் பணம் வீண் எனக் கருத்து டிவிட்டரில் வந்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு புதிய வருமான வரித் தளத்திற்கு எவ்வளவு பணம் தொடுத்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு - இன்போசிஸ்

மத்திய அரசு - இன்போசிஸ்

நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகள் அடிப்படையில் புதிய வருமான வரி தளத்திற்காக மட்டும் மத்திய அரசு இன்போசிஸ் நிறுவனத்திற்கு ஜனவரி 2019 முதல் ஜூன் 2021 வரையில் 164.5 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய வருமான வரித் தளம்

புதிய வருமான வரித் தளம்

இன்போசிஸ் நிறுவனம் ஈபைலிங் மற்றும் Centralized Processing Centre 2.0 திட்டத்தை ஓப்பன் டென்டர் வாயிலாகவே பெற்றது. இந்த ஒப்பந்தம் கைப்பற்றியதன் மூலம் இன்போசில் குறைந்த விலையில் அரசுக்கு சேவை அளிக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பங்கஜ் சவுத்ரி
 

பங்கஜ் சவுத்ரி

மேலும் இன்போசிஸ் மற்றும் மத்திய அரசுக்குமான நிதி பரிமாற்ற அளவீட்டுத் தகவல்களை நாடாளுமன்றத்தில் மாநில நிதியமைச்சரான பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார். வெறும் 164.5 கோடி ரூபாய் தொகையில் தான் மொத்த ஈபைலிங் மற்றும் Centralized Processing Centre 2.0 தளத்தை இன்போசிஸ் உருவாக்கியுள்ளதா என்றால் கட்டாயம் இல்லை.

ரூ.4,241 கோடி மதிப்பிலான திட்ட

ரூ.4,241 கோடி மதிப்பிலான திட்ட

மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனவரி 16, 2019ல் ஈபைலிங், Centralized Processing Centre 2.0, MSP-கான பேஅவுட், ஜிஎஸ்டி, வாடகை, போஸ்டேஜ் மற்றும் பிராஜெக்ட் மேனேஜ்மென்ட் செலவு என அனைத்திற்கும் சேர்ந்து அடுத்த 8.5 வருடத்திற்கு 4,241 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை இன்போசிஸ் நிறுவனத்திற்கு அளித்தது.

ஈபைலிங் தளம்

ஈபைலிங் தளம்

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஜூன் 7ஆம் தேதி ஈபைலிங் மற்றும் Centralized Processing Centre 2.0 திட்டத்தை மக்களின் பயன்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்டது. ஆரம்பம் முதல் பல்வேறு பிரச்சனைகளை இத்தளத்தில் எதிர்கொண்டு வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi's Govt paid to Infosys Rs 164.5 cr for new Efiling and CPC 2.0

Modi's Govt paid to Infosys Rs 164.5 cr for new Efiling and CPC 2.0
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X