ஆசியாவிலேயே 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அதிகளவிலான வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்தை உருவாக்கப் புதிதாக ஒரு வங்கியைத் துவங்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் ரகசியமாகத் திட்டமிட்டு வருகிறது.
இந்த வங்கி குறித்த அறிவிப்பு தான் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக இருக்கப் போகிறது எனத் தகவல் கிடைத்துள்ளது.
மோடி அரசின் புதிய திட்டம்
2020ல் ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்புகள் இந்தியப் பொருளாதாரத்தை மந்த நிலைக்குத் தள்ளியுள்ளது, இதுமட்டும் அல்லாமல் டிசம்பர் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்நிலையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகிய இரு முக்கியப் பிரச்சனைகளை ஒரே நேரத்தில் சமாளிக்கப் புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது மத்திய அரசு.
பிரத்தியேக வங்கி
இந்தியாவில் துறைமுகம், சாலை மற்றும் மின்சாரம் (உற்பத்தி மற்றும் விநியோகம்) ஆகிய திட்டங்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக இயங்கும், நிதியுதவி செய்யும் ஒரு வங்கியை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அறிவிக்கப்படும் எனவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
இந்தச் சிறப்பு வங்கியை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய், அதாவது 13.7 பில்லியன் டாலர் முதலீட்டில் இந்த வங்கியை அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இந்தியா இன்பராஸ்டக்சர் பைனான்ஸ் அமைப்பையும், இந்த அமைப்பில் இருக்கும் 2000 கோடி ரூபாய் தொகையும் இப்புதிய வங்கியில் இணைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
முதற்கட்டமாக இப்புதிய வங்கியில் அரசு முதலீட்டு செய்யவும், பின்னாளில் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் கூடுதல் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இப்புதிய திட்டம் குறித்து ஆலோசனை செய்ய மத்திய நிதியமைச்சகம் பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
வெளிநாட்டு முதலீடு
இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் மந்தமாக இருக்கும் இந்த நிலையில், நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி செலவு செய்வதில் மிகப்பெரிய சவாலை மத்திய அரசு எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நாட்டின் உள்கட்டுமான திட்டங்களுக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது என்பது பெரும் சவால்.
இந்திய வங்கிகள்
மேலும் நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை மார்ச் 2020 உடன் முடிந்த 2 வருடத்தில் உட்செலுத்தியுள்ளது. ஆனால் நடப்பு நிதியாண்டில் ஏற்பட்டு உள்ள நிதிப் பற்றாக்குறை மற்றும் மோசமான வருவாய் வளர்ச்சி நிதி உட்செலுத்தும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

மோடியின் திடீர் அவசர CCS கூட்டம்.. எதற்காக ஞாயிற்றுக்கிழமை மீட்டிங்..? என்ன நடந்தது..?!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications