இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான NTPC அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் துறையில் இறங்குவதாக அறிவித்த சில வாரங்களில் 2வது திட்டத்தை நிறுவத் திட்டமிட்டு உள்ளது.
இந்தியாவில் உற்பத்தித் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மக்கள் பயன்பாடு, தொழிற்துறை என அனைத்து பிரிவுக்கும் போதுமான மின்சாரத்தைத் தயாரிக்க நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின் நிலையம் மட்டும் போதாது. இதேபோல் இந்தியா Net Zero இலக்கை அடைய சுற்றுச்சூழல்-ஐ பாதிக்கும் நிலக்கரியைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இதற்கு மாறாகத் தற்போது பிரதமர் நரேந்திர மோடி அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க ஊக்குவித்து வருவது மட்டும் அல்லாமல் பல பொதுத்துறை நிறுவனங்களுக்கு இதற்கான கதவுகளைத் திறந்துள்ளார்.
நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடியின் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வேகத்தை அதிகரித்து வருகிறது. இதற்காக Nuclear Power Corp. of India அமைப்பை தாண்டி பொதுத்துறை நிறுவனங்களும் இத்துறையில் இறங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
ஆறு ஜிகாவாட் மின்சாரம்
இந்தியா தற்போது ஆறு ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணுசக்தி தளத்தை உருவாக்கி வருகிறது. இதில் இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக இருந்தாலும் கட்டுமானத்தின் அளவு பொருத்த வரையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக அளவைக் சீனா கொண்டுள்ளதாகச் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
என்டிபிசி லிமிடெட்
அந்த வரையில் என்டிபிசி லிமிடெட் இந்த மாதத்தின் துவக்கத்தில் தனது முதல் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தளத்தை ஹரியானா மாநிலத்தின் கோரக்பூர்-ல் இரண்டு ரியாக்டர் கொண்டு உருவாக்கத் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
2வது தளம் - மத்திய பிரதேசம்
தற்போது 2வது தளத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு 700 மெகாவாட் அணுஉலைகள் மூலம் அமைக்க Nuclear Power Corp உடன் என்டிபிசி லிமிடெட் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இதுவரையில் NTPC, அணுசக்தி மின்சார நிறுவனம் மற்றும் மத்திய அணுசக்தித் துறை எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கார்பன் வெளியேற்றம்
2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தைப் பூஜ்ஜியமாக்க இந்தியா முயற்சி செய்து வரும் நிலையில், தூய்மையான மூலங்களிலிருந்து மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான முதல் படி தான் NTPC திட்டமிட்டு வரும் கோரக்பூர் மற்றும் மத்திய பிரதேச திட்டம்.
அணுசக்தி மின்சாரம்
அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் அணுசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரிக்க மோடி இலக்கு வைத்துள்ளார். தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 70 சதவீத மின்சாரம் நிலக்கரியைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. வெறும் 3 சதவீதம் மட்டுமே அணுசக்தி மூலம் தயாரிக்கப்படும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications