இந்திய வங்கித் துறை புதிய சாதனை படைத்துள்ளது, இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது மற்றும் தனியார்த் துறை வங்கிகள் 2023-24 நிதியாண்டில் (FY24) ஒட்டுமொத்த நிகர லாபம் 39% அதிகரித்து ரூ.3.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் (FY23) இந்த லாபம் ரூ.2.2 லட்சம் கோடியாக இருந்தது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி செய்த ட்வீட்-ல், கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்கத் திருப்பமாக, இந்தியாவின் வங்கித் துறை நிகர லாபம் முதன்முறையாக ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் போன் பேங்கிங் கொள்கையால் நமது வங்கிகள் நஷ்டத்திலும், அதிகப்படியான NPAகளிலும் தத்தளித்தன, ஏழைகளுக்கு வங்கிகளின் கதவுகள் மூடப்பட்டன.
ஆனால் இப்போது இந்த நிலை மாறி, வங்கிகள் ஆரோக்கியமாக வளர்ந்து வருவது மட்டும் அல்லாமல் ஏழைகள், விவசாயிகள் மற்றும் MSME களுக்கு கடன் கிடைப்பதை மேம்படுத்த உதவியுள்ளது என தங்களுடைய 10 வருட ஆட்சியில் இது பெரும் சாதனை என தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ட்வீட்டுக்கு பதில் அளித்த சுப்பிரமணியன் சாமி தனது ட்வீட்டில், கொடுக்கப்பட்ட கடன்கள் வருமானம் வாரியாக அளிக்கப்பட்டு உள்ளது என்று சொல்லும் போது தான் உண்மை சிறப்பாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு K வகை கடன் பாலிசி ஆகும், குறைந்த வருமானம் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பெரியவர்களின் சுகாதார செலவுகளுக்கு கடன் பெற போராடுகிறார்கள் என தெரிவித்தார்.

கடந்த 2 வருடத்தில் பதிவான நிகர லாப அளவீட்டைப் பார்க்கும் போது, பொதுத்துறை வங்கிகளின் பங்கு அளவு வியப்பு அளிக்கிறது. 2023-24 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் 34% உயர்ந்து ரூ.1.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இது ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது.
தனியார்த் துறை வங்கிகளையும் பொறுத்தவரை, அவற்றின் நிகர லாபம் கடந்த ஆண்டின் ரூ.1.2 லட்சம் கோடியிலிருந்து 42% அதிகரித்து ரூ.1.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், பொது மற்றும் தனியார்த் துறை வங்கிகளின் லாப இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது, ஆனால் தொடர் வளர்ச்சிப் பாதையில் இருப்பது குட்நியூஸ்.
முதல் மூன்று காலாண்டுகளில் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த லாபத்தையும் விட வங்கிகளின் நிதி ஆண்டு லாபம் அதிகமாக உள்ளது. உதாரணமாக, கடந்த நிதியாண்டில் பட்டியலிடப்பட்ட ஐடி சேவை நிறுவனங்களின் நிகர லாபம் ரூ.1.1 லட்சம் கோடியாக இருந்தது.
இது வரையிலான காலகட்டத்தில் மிகவும் லாபகரமான துறையாக ஐடி சேவைத் துறை இருந்து வந்தது. இதை உடைத்து வங்கித்துறை மிகவும் லாபம் ஈட்டும் துறையாக மாறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகள் தங்கள் கடன் நிலுவைகளை ஒழுங்குபடுத்தி வருமானத்தை அதிகரித்ததன் மூலம் தனியார்த் துறை வங்கிகளுடனான லாப இடைவெளியைக் குறைத்து வந்தன. உண்மையில், கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் நான்கு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.
மேலும் பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதிய கணக்குகளுக்காகப் பல வங்கிகள் ஒருமுறை ஒதுக்கீடு செய்ய வேண்டியிருந்ததால், 2023-24 நிதியாண்டில் அவற்றின் நிகர லாபம் சற்று குறைந்துள்ளது. மேலும், கோ ஏர் நிறுவனத்திற்கு வழங்கிய கடனுக்கான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வளர்ச்சி இந்திய வங்கித் துறையின் வலிமையையும், பொருளாதாரத்தின் மீதான அதன் நேர்மறையான தாக்கத்தையும் காட்டுகிறது. அதே நேரத்தில், பொது மற்றும் தனியார் வங்கி பங்குகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்று வருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications