ஒவ்வொருவருமே தங்களுடைய வாழ்க்கையில் லட்சுமிதேவியின் அருள் எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். என்னதான் கடினமாக உழைத்தாலும் சில நேரங்களில் பணப் பற்றாக்குறை ஏற்படுகிறது. உங்களுக்கும் இதே போல பிரச்சனை ஏற்பட்டால், வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இதன் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டு பணவரவுக்கான வழிகள் பிறக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் இருக்கும் சில பொருட்கள் பொருளாதார ரீதியாக பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்த பொருட்கள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஓடாத வாட்ச்: இன்றைய ஃபேஷன் உலகம் வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப புது புது பொருட்களும் சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. பெரும்பாலானோர் ரிஸ்ட் வாட்ச்களை அணிவதில் ஆர்வம் காட்டுவார்கள், புதிய வாட்ச்-களை அணியும் ஆசையில் பழைய வாட்ச்-ஐ அலமாரியிலோ அல்லது டிராயரிலோ வைத்து அப்படியே மறந்து விடுவார்கள்.

இதன் காரணமாக பேட்டரி தீர்ந்து காலப்போக்கில் வாட்ச் ஓடுவது நின்றுவிடும். சுவர் கடிகாரங்களுக்கும் இதே நிலைதான். வாஸ்து சாஸ்திரத்தின் படி வாட்ச் அல்லது கடிகாரங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் வீட்டில் வைக்கக் கூடாது. இது முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருப்பதுடன், பணம் கிடைப்பதிலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
துருப்பிடித்த இரும்பு: ஜோதிடத்தில் இரும்பு சனிபகவானுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இரும்பு துருப்பிடித்து இருந்தால் அதை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இதனால் மன உளைச்சல் ஏற்படுவதோடு, தொழிலில் முழு கவனம் செலுத்த முடியாத நிலையும் ஏற்படுமாம். வேலை மற்றும் வியாபாரத்தில் தடைகள் ஏற்பட்டு பணம் பெறுவதற்கான பாதை அடைக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.
வீட்டின் மேற்கூரையில் இருக்கும் குப்பைகள்: சிலர் வீட்டை நன்றாக சுத்தம் செய்வார்கள் ஆனால் மேற்கூரையில் குப்பைகள் கிடக்கும். உதாரணமாக மர துண்டுகள், இரும்பு, பேப்பர், பாலித்தீன், சாக்குகள் போன்றவை பல ஆண்டுகளாக சிலர் வீட்டின் மேற்கூரையில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதுவும் வாஸ்து தோஷத்திற்கு ஒரு பெரிய காரணமாக கருதப்படுகிறது. வீட்டின் கூரையில் கிடக்கும் குப்பைகளால் பணவரவு தடைப்படும்.
இறந்த உறவினரின் ஆடைகள்: இதுவும் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணமாகும். இறந்த உறவினரின் உடைகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. ஜோதிடத்தின்படி இறந்த உறவினரின் உடைகளை ஏழை அல்லது தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க வேண்டும். இறந்த உறவினர்களின் பழைய ஆடைகளை வீட்டில் வைத்திருப்பது பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.
தன்னீர் சொட்டும் குழாய்: சில நேரங்களில் வீட்டில் உள்ள குழாயிலிருந்து தண்ணீர் சொட்டி கொண்டே இருக்கும். பெரும்பாலான மக்கள் தங்களுடைய பிசி வாழ்க்கையில் இதை பொருட்படுத்தாமல் மறந்து விடுவார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள ஒரு குழாய் மூடி இருந்தும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தால் அது செல்வத்தை கரைக்கச் செய்யும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் இது போன்ற குழாய்கள் இருப்பது நிதி இழப்பை ஏற்படுத்தும், மேலும் வருமானம் வருவதைக் குறைக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications