வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரம்.. விலைவாசி ஏற்றமும் காரணம்.. உண்மையை போட்டுடைத்த கணிப்பு!

டெல்லி: இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் நடத்திய கணக்கெடுப்பில், மொத்தம் பதிலளித்தவர்களில் 62% பேர் வெங்காயம் மற்றும் பிற உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவது, இந்திய பொருளாதாத்தின் மிக மோசமான நிலையின் குறிகாட்டிகளாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் மற்ற 28% பேர் வேறு விதமாக உணர்ந்ததாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூட் ஆப் தி நேஷன் சர்வே என்ற இந்த கணக்கெடுப்பில் இந்தியா முழுவதும் 12,141 பேரிடம் நடத்தப்பட்டதாக இந்தியா டுடே சர்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விலையேற்றத்தை சுட்டிக் காட்டும் பணவீக்கம்

விலையேற்றத்தை சுட்டிக் காட்டும் பணவீக்கம்

நாட்டின் சில்லறை பணவீக்கம் மற்றும் மொத்த விலை பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளன. இது இந்தியாவில் நிலவி வரும் அதிகப்படியான விலையேற்றத்தினையே சுட்டிக் காட்டுகின்றன. அதிலும் குறிப்பாக உணவுப் பொருட்களின் பணவீக்கம் தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இதனால் இந்திய பொருளாதாரம் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றது.

பணவீக்கம் அதிகரிப்பு

பணவீக்கம் அதிகரிப்பு

இதே நுகர்வோர் விலை குறியீடு என்னும் சிபிஐ கிட்டதட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.35% அதிகரித்துள்ளது. இதே மொத்த விலை பணவீக்கம் எட்டு மாதத்தில் இல்லாத அளவுக்கு 2.59% அதிகரித்துள்ளது. இந்த அதிகளவிலான பணவீக்க விகிதமானது வெங்காய விலையால் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சொல்லப்போனால் அவை டிசம்பரில் 455% உயர்ந்துள்ளன. இதே மற்ற காய்கறின் விலை 70% உயர்ந்துள்ளது.

வெங்காயம் விலை

வெங்காயம் விலை

கடந்த டிசம்பர் மாதத்தில் சுமார் 160 ரூபாயாக இருந்த வெங்காயத்தின் விலை, தற்போது கிலோவுக்கு 60 - 70 ரூபாய் வரை வர்த்தகமாகி வருகிறது. மேலும் முந்தைய ஆண்டில் பயிர் செய்யப்பட்ட புதிய வெங்காயங்கள் தற்போது தான் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. இது ஜனவரி முதல் மே வரையில் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி வரும் மாதங்களில் விலை கட்டுக்குள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதிக்கு தடை

ஏற்றுமதிக்கு தடை

இந்த நிலையில் தற்போது தான் உள்நாட்டு சந்தையில் வெங்காயம் வரத்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால், மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்குவதை பரீசிலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பரில் பொருட்கள் இருப்பையும், கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும், உயரும் விலையை கட்டு்குள் கொண்டு வரவும் வெங்காயம் ஏற்றுமதி செய்வதை, அரசு ஏற்றுமதியை தடை செய்தது.

வெள்ளத்தால் பாதிப்பு

வெள்ளத்தால் பாதிப்பு

மேலும் மஹாராஷ்டிரா போன்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், வெங்காயம் உற்பத்தி வீழ்ச்சி கண்டது. இதனால் பல மாநிலங்களுக்கு அனுப்பப்படும் வெங்காயம் சப்ளை குறைந்தது. இதனால் டெல்லி மற்றும் நாட்டின் முக்கிய பகுதிகளில் வெங்காயம் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டது. சொல்லப்போனால் அந்த சமயத்தில் 200 ரூபாய் வரை கூட சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே இப்படி ஒரு மோசமான பணவீக்கத்தை நாடு எதிர்கொண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+