இந்தியாவுடன் போர்.. பாகிஸ்தானுக்கு கெட்ட நேரம்.. மூடிஸ் கொடுத்த வார்னிங்..!!

பாகிஸ்தான் இந்தியாவுடன் போரில் ஈடுபட்டால் பொருளாதார ரீதியாக பெரிய அளவிலான பாதிப்புகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் என சர்வதேச தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது .

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா ராஜாங்க ரீதியிலான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எல்லையில் போர் பதற்றமும் உண்டாகி இருக்கிறது. மே 7ஆம் தேதி நாடு முழுவதும் போர் ஒத்திகையும் நடத்தப்பட உள்ளது.

இந்தியாவுடன் போர்.. பாகிஸ்தானுக்கு கெட்ட நேரம்.. மூடிஸ் கொடுத்த வார்னிங்..!!

இந்த சூழலில் இந்தியா பாகிஸ்தான இடையே போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்புகளை சந்திக்கும் என மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் வெளியிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியிருக்கிறது. ஏற்கனவே பாகிஸ்தானிடம் பெரிய அளவில் வெளிநாட்டு கரன்சி கையிருப்பு கிடையாது, போர் ஏற்பட்டால் கையில் இருக்கும் பணத்தையும் இழந்து எந்த ஒரு கடனையும் திரும்ப செலுத்த முடியாத சூழலுக்கு பாகிஸ்தான் செல்லும் என தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதி உதவிகளை நிறுத்தும் , மேற்கொண்டு எந்த ஒரு அமைப்பும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவதற்கு முன் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது . சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் உதவிகளை வழங்கும் போது பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இந்த நிபந்தனைகளை பின்பற்றியதால் பாகிஸ்தானின் பொருளாதாரம் லேசாக மீள தொடங்கியது. பணவீக்கம் சற்றே குறைந்தது. ஆனால் தற்போது இந்தியா பாகிஸ்தான இடையில் ஏற்பட்டிருக்கக் கூடிய இந்த போர் பதற்றம் பாகிஸ்தானை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு சென்று விட்டிருக்கிறது என மூடிஸ் நிறுவனம் கூறியுள்ளது.

அதே வேளையில் இந்தியா வலுவான ஒரு பொருளாதரமாக வேகமான பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஜிடிபி சீராக இருக்கிறது என்றும் உள்நாட்டு சந்தையில் மக்கள் செலவினங்களை அதிகரிக்கும் வகையில் இந்திய அரசு பல்வேறு நடவடிக்கையில் எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கிறது. பாகிஸ்தானுடன் பெரிய அளவில் வர்த்தக உறவு இல்லை என்பதால் இந்த போரினால் இந்தியாவிற்கு பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு இருக்காது என்றும் மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை எல்லையில் பாகிஸ்தானுடன் இந்தியா போரில் ஈடுபடக்கூடிய சூழல் வந்தால் இந்தியா ராணுவத்திற்கான செலவினத்தை அதிகரிக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் அப்படி இருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலையாகவே இருக்கும் என கூறியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+