வரும் 2021-ம் ஆண்டுக்குள், இந்தியா, பெரிய வளரும் நாடுகளுக்கு மத்தியில், அதிக கடனை வாங்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் என, மூடீஸ் முதலீட்டாளர் சேவை, நேற்று (01 செப்டம்பர் 2020) சொல்லி இருக்கிறது.
கொரோனா வைரஸ் பிரச்சனையால், பல வளரும் நாடுகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனை, அடுத்த சில ஆண்டுகளுக்கு, பெரிய வளரும் நாடுகளை, அதிக கடனில் வைத்திருக்கும் எனவும் சொல்லி இருக்கிறது .
பெரிய வளரும் நாடுகளின், அரசு வாங்கும் கடன், 2019-ம் ஆண்டின் அளவை விட, 2021-ம் ஆண்டின் முடிவில், சராசரியாக 10 சதவிகிதம் அதிகரிக்கலாம் எனவும் மூடீஸ் ஏஜென்சி எதிர்பார்க்கிறதாம்.

இந்த கடன் அளவு அதிகரிப்புக்கு, பிரைமரி டெபிசிட் (Primary Deficit) உயர்வது ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறது மூடிஸ்.
அதோடு, சில நாடுகள் அதிக கடன் வாங்கி இருப்பதால் அதிகம் வட்டி செலுத்த வேண்டி வரலாம். இதனாலும் கடன் மேலும் அதிகரிக்கலாம் என்கிறது மூடீஸ்.
2021-ம் ஆண்டு வாக்கில், பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கடன் சுமை, வளரும் நாடுகளிலேயே, அதிகமாக இருக்கும் எனவும் மூடிஸ் அடிக்கோடு போட்டுச் சொல்லி இருக்கிறது.
இந்தியா, மெக்ஸிகோ, தென் ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில், நிதித் துறை பலவீனமாக இருக்கிறது. அதோடு சில நாடுகளில் contingent liability பிரச்சனைகளும் இருக்கின்றன. இந்த பிரச்சனைகள், மேலே சொன்ன நாடுகளின் ரிஸ்கை அதிகப்படுத்துகிறது எனச் சொல்கிறது மூடீஸ்.
இந்தியாவில், செயல்படாத கடன்கள் பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சொத்துக்களின் தரத்தினால் இந்திய வங்கித் துறை பாதிக்கப்படுகிறது. அதோடு low loan-loss coverage மற்றும் capital adequacy பிரச்சனைகளாலும் பாதிக்கப்படுவதாகச் சொல்கிறது மூடீஸ் முதலீட்டாளர் சேவை ஏஜென்சி.
மேலே சொன்ன பிரச்சனை, இந்திய அரசு வங்கிகளின் நிலை எனவும் குறிப்பிட்டுச் சொல்கிறது மூடீஸ்.
இந்திய நிதித் துறையில் இருக்கும் பலவீனம், இந்திய பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் சொல்லி இருக்கிறது மூடிஸ் முதலீட்டாளர் சேவை ஏஜென்சி.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications