மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் நிறுவனம் பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கியான எஸ்பிஐ மற்றும் ஹெஸ்டிஎஃப்சி வங்கிகளுக்கு நீண்டகால டெபாசிட்களுக்கும், வெளி நாட்டு நாணய வைப்பு நிதி குறித்த தர மதிப்பீடுகளையும் குறைத்துள்ளது.
பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளின் நீண்டகால வைப்பு நிதி குறித்த தர மதிப்பீட்டினையும் பரிசீலனைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் இறையாண்மை பத்திரங்களுக்கான தர மதிப்பீட்டினையும் Baa2 விலிருந்து Baa3 ஆக குறைத்த அடுத்த நாள், இந்த வங்கிகளுக்கான தரக் குறியீடுகளையும் குறைத்து மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்?
இது குறைந்த வளர்ச்சியின் காரணமாகவும், தற்போது நிலவி வரும் சவாலான நிலைகளையும் சுட்டி காட்டி இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது மூடீஸ் நிறுவனம். வங்கிகளின் தர மதிப்பீட்டினை குறைப்பதும், இந்தியாவின் தர மதிப்பீட்டினை குறைப்பதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பத்திர தர மதிப்பு குறைப்பு
கொரோனா வைரஸின் காரணமாக இறையாண்மை பத்திரங்களின் தர மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலீடுகள் குறையலாம். பொருளாதார சீர்குலைவு ஏற்படலாம். ஆக இன்றைய நடவடிக்கைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. ஏனெனில் கொரோனா காரணமாக இந்திய பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவினை சந்தித்துள்ளது. இதனால் இந்திய வங்கித் துறைகளும் பலவீனமடைந்துள்ளன என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது.
லிஸ்டில் 11 வங்கிகள்
ஆக மொத்தத்தில் மூடிஸ் தற்போது 11 வங்கிகளின் மீது மதிப்பீட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த லிஸ்டில் இன்டஸ்இந்த் பேங்க் மற்றும் எக்ஸிம் வங்கிகளின் தர மதிப்பீட்டினை குறைத்துள்ளது. இதே பஞ்சாப் நேஷனல் பேங்க் கண்ணோட்டத்தினை நிலையானது என்பதிலிருந்து நேர் மறையாக மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பிரச்சனை தான்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் பல பொதுத்துறை வங்கிகளின் தரக்குறியீட்டினையும் தரமிறக்கவுள்ளதாகவும் மூடிஸ் கூறியுள்ளது. ஏற்கனவே வாராக்கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் வங்கிகள், இந்த தர குறைப்பால் இன்னும் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்குமோ தெரியவில்லை.
அதிலும் இந்த கொரோனா இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை..
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications