அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அரசு ஊழியர்களை தானாகவே பணியில் இருந்து விலகும் படி அறிவித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கைகளை கண்டித்து சுமார் 20,000 அரசு ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் அரசு நிர்வாகத்தை பெரிய அளவில் சீரமைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக அரசு செயல்திறன் துறை என்ற ஒரு துறையையும் அவர் உருவாக்கியிருக்கிறார். இதற்கு எலான் மஸ்க் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அரசு செயல்திறனை அதிகரிப்பதற்காக பல்வேறு மாற்றங்களை இவர் கொண்டு வர இருக்கிறார்.

இந்நிலையில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஊழியர்கள் தாங்களாகவே வேலை விட்டு செல்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. இவ்வாறு வேலையை விட்டு செல்லக்கூடிய ஊழியர்களுக்கு 8 மாதங்களுக்கான சம்பளமும் மற்றும் பிற பலன்களும் வழங்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த ஊழியர்கள் 8 மாதங்களுக்கு அலுவலகம் வர தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பை பொறுத்தவரை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தான் ஊழியர்கள் தானாகவே வேலையை விட்டு நிற்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அரசு ஊழியர்கள் சங்கம் டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அரசின் சட்ட திட்டங்களுக்கு முற்றிலும் எதிரானது என கூறுகின்றனர். நீதிமன்றத்திலும் அவர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
அதேவேளையில் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக சுமார் 20,000 அரசு ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இவ்வாறு ஊழியர்களை வேலையை விட்டு போகச் சொல்வதன் மூலம் அரசு வேலைகள் பெருமளவில் பாதிக்கப்படும் என கூறுகின்றனர்.
எந்த ஊழியரும் கட்டாயம் பணியிலிருந்து வெளியேறவேண்டும் என நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என விளக்கம் தந்துள்ள டிரம்ப் நிர்வாகம், இது முற்றிலும் ஊழியர்களின் சொந்த முடிவாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு வெளியேற நினைக்கும் ஊழியர்களுக்கு அரசு நிதி ஆதரவை தரும் வகையில் தான் 8 மாதத்திற்கான சம்பளத்தை வழங்குகிறோம் என்று டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது. இதற்காக வியாழக்கிழமை வரை அரசு ஊழியர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் பொது பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோலர்கள் இடம்பெற மாற்ற மாட்டார்கள் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தான் டிரம்ப் நிர்வாகம் அரசு ஊழியர்கள் செயல் திறனே இல்லாமல் இருக்கின்றனர் என குற்றம் சாட்டியது. இவ்வாறு சரியாக வேலை செய்யாத ஊழியர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் என கூறியது.
More From GoodReturns

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications