அமெரிக்காவின் பிரபலமான முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் சந்தித்த இழப்புகள் "பொருளாதாரம் சார்பற்ற பிரச்சினைகள்" காரணமாக ஏற்பட்டவை என சமீபத்திய அறிக்கையில் இந்திய பங்குச்சந்தை குறித்து தெரிவித்தது.
இந்திய பொருளாதாரத்தின் சிறப்பான வளர்ச்சியும், கார்ப்ரேட் நிறுவனங்களின் பலத்த லாப வளர்ச்சியும், தொடர் சீர்திருத்தங்கள் காரணமாக, இந்திய பங்குச் சந்தையின் மீது மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தொடர்ந்து நம்பிக்கையுடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், 2034ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகும் என்றும், இதன் மூலம் உள்நாட்டு நுகர்வு மேலும் அதிகரிக்கும் என்றும் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து மோர்கன் ஸ்டான்லி 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் வருமானம் ரூ.1,83,236 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டின் ரூ.1,69,496 உடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
இந்த அறிக்கையின்படி, அடுத்த 10 வருடத்தில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் $5,800 ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, இது இன்றைய நாணய மதிப்பில் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் சற்று குறைவான அளவாகும்.
இந்தியாவின் மைக்ரோ பொருளாதார குறியீடுகள் மிகவும் சிறப்பாக உள்ளன. மார்ச் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்ப்புகளுக்கும் அதிகமாகவே வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் கடன் வளர்ச்சி 15.8% ஆகவும், PMI குறியீடு தொடர்ந்து விரிவாக்கப் பாதையில் உள்ளது.
மோர்கன் ஸ்டான்லி அறிக்கையின் படி, நாட்டின் உற்பத்தித் துறையின் வளர்ச்சி, எனர்ஜி மாற்றம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் பொருளாதார விரிவாக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்.
இதோடு இந்தியாவின் பருவமழை போக்கு மற்றும் 2025ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கை ஆகியவை அடுத்த வளர்ச்சி பாதைக்கும் அடித்தளமாக இருக்கும் ண நம்பப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications