அமெரிக்காவின் பிரபலமான முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் சந்தித்த இழப்புகள் "பொருளாதாரம் சார்பற்ற பிரச்சினைகள்" காரணமாக ஏற்பட்டவை என சமீபத்திய அறிக்கையில் இந்திய பங்குச்சந்தை குறித்து தெரிவித்தது.
இந்திய பொருளாதாரத்தின் சிறப்பான வளர்ச்சியும், கார்ப்ரேட் நிறுவனங்களின் பலத்த லாப வளர்ச்சியும், தொடர் சீர்திருத்தங்கள் காரணமாக, இந்திய பங்குச் சந்தையின் மீது மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தொடர்ந்து நம்பிக்கையுடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், 2034ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகும் என்றும், இதன் மூலம் உள்நாட்டு நுகர்வு மேலும் அதிகரிக்கும் என்றும் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து மோர்கன் ஸ்டான்லி 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் வருமானம் ரூ.1,83,236 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டின் ரூ.1,69,496 உடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
இந்த அறிக்கையின்படி, அடுத்த 10 வருடத்தில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் $5,800 ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, இது இன்றைய நாணய மதிப்பில் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் சற்று குறைவான அளவாகும்.
இந்தியாவின் மைக்ரோ பொருளாதார குறியீடுகள் மிகவும் சிறப்பாக உள்ளன. மார்ச் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்ப்புகளுக்கும் அதிகமாகவே வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் கடன் வளர்ச்சி 15.8% ஆகவும், PMI குறியீடு தொடர்ந்து விரிவாக்கப் பாதையில் உள்ளது.
மோர்கன் ஸ்டான்லி அறிக்கையின் படி, நாட்டின் உற்பத்தித் துறையின் வளர்ச்சி, எனர்ஜி மாற்றம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் பொருளாதார விரிவாக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்.
இதோடு இந்தியாவின் பருவமழை போக்கு மற்றும் 2025ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கை ஆகியவை அடுத்த வளர்ச்சி பாதைக்கும் அடித்தளமாக இருக்கும் ண நம்பப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications