இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இப்படியிருக்கையில் நாட்டின் தலைநகரான டெல்லியில் மிகவும் காட்லியான வீட்டின் விலை மதிப்பு மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல்.
டெல்லி நாட்டின் தலைநகராக இருப்பது மட்டும் அல்லாமல் பல அரசியல் பெரும் தலைவர்கள், முக்கிய தொழிலதிபர்களின் வசிப்பிடமாகவும் உயர்ந்துள்ளது. இப்படியிருக்கையில் டெல்லியின் இந்த விலையுயர்ந்த வீட்டின் உரிமையாளர் என்ற கேள்வி அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் உள்ளது.

பிரபல கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி அல்லது ரத்தன் டாடா ஆகியோருக்கு அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினருக்கு சொந்தமானதாக இருக்கும் என பலரும் நினைக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இல்லை. இந்தியாவில் மதிப்பிற்குரிய மற்றும் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் குழுமமாக விளங்கும் DLF-ன் தலைவரான கேபி சிங்-ன் மகளுக்கு சொந்தமானது இந்த வீடு.
கேபி சிங்-ன் மகள் ரேணுகா தல்வார் டெல்லியில் உள்ள மிகவும் விலையுயர்ந்த வீட்டின் உரிமையாளராக உள்ளார், தேசிய தலைநகரின் மிகவும் ஆடம்பரமான பகுதிகளில் ஒன்றான பிருத்விராஜ் சாலையில் உள்ள பிரதான சொத்து இது. வீட்டின் அபரிமிதமான விலை, லுட்யென்ஸ் பகுதியில் பல ஆண்டுகளில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக திகழ்கிறது.
டிஎல்எஃப் தலைவர் கேபி சிங்-ன் மகள் ரேணுகா தல்வார் 2016 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பிருத்விராஜ் சாலையில் ரூ.435 கோடிக்கு ஒரு பெரிய வீட்டை வாங்கினார். இந்த வீட்டை TDI Infracorp தலைவர் கமல் தனேஜா அவர்களிடம் இருந்து ரேணுகா தல்வார் வாங்கினாபர். தற்போது இந்த வீட்டு 500 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிடப்பட்டு உள்ளது.
ரேணுகா தல்வார் இந்த வீட்டை சுமார் 5000 சதுர மீட்டர் அளவு கொண்டது, இதில் வீட்டு அமைந்திருக்கும் பகுதியின் இடம் மட்டும் 1189 சதுர மீட்டர். ரேணுகா தல்வார் டெல்லியில் பல ரியல் எஸ்டேட் சொத்துக்களை வைத்துக்கொண்டு சுமார் 2780 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications