கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் உலகில் உள்ள அனைத்து ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது அந்த ஊழியர்களை மீண்டும் அலுவலகத்தில் வரவழைக்க திணறி வருவதாக கூறப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வீட்டிலிருந்து பணிபுரிந்த ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் வர மறுப்பதாகவும், அலுவலகத்திற்கு வர கட்டாயப்படுத்தினால் தங்கள் வேலையைக் கூட ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
40 ஐடி நிறுவனங்களில் ஆய்வு
இந்த நிலையில் 40 முன்னணி ஐடி நிறுவனங்களில் எடுத்த ஆய்வில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப விரும்பவில்லை என்று ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
சி.ஐ.ஈ.எல் ஆய்வு
இதுகுறித்து சி.ஐ.ஈ.எல் என்ற நிறுவனம் சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தியது. 9 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்யும் 10 முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்பட மொத்தம் 40 ஐடி நிறுவனங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வொர்க் ப்ரம் ஹோம்
இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 50 சதவீத ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைத்து பணி செய்ய முயற்சி செய்தும் அதற்கு எந்த பலனும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதனால் வேறு வழியின்றி ஐடி நிறுவனங்கள் இன்னும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்து வருவதாகவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைபிரிட் முறை
ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலத்திற்கு வரவழைத்து விட்டன என்றும் சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலத்திற்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளது என்றும் இந்த ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு சில நிறுவனங்கள் ஹைபிரிட் முறையில் அதாவது வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் மூன்று நாட்கள் வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை அமல்படுத்தி வருவதாகவும் இதற்கு கூட 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே ஒப்புக்கொண்டு அலுவலத்திற்கு திருப்பி உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவு
சிறிய நிறுவனங்களை பொருத்தவரை 30 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்துக்கு திரும்ப விரும்புகிறார்கள் என்றும் 70 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்வதையே விரும்புகிறார்கள் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலத்திற்கு திரும்ப வரவழைப்பதில் திணறி வருகிறது என்பதுதான் இந்த ஆய்வின் முடிவு என தெரிய வருகிறது.
ராஜினாமா
திறமையான ஐடி ஊழியர்களுக்கு எந்த ஐடி நிறுவனத்திலும் உடனடியாக வேலை கிடைக்கும் என்பதால், அலுவலகம் வர கட்டாயப்படுத்தினால் அவர்கள் வேலையை ராஜினாமா செய்ய கூட தயங்குவதில்லை என ஐடி சேவை நிறுவனத்தின் ஹெச்.ஆர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலம்
ஐடி நிறுவனங்கள் முழுமையாக வொர்க் ப்ரம் ஹோம் அல்லது ஹைபிரிட் முறையில்தான் பணிபுரிய வேண்டிய நிலை தான் எதிர்காலத்தில் ஏற்படும் என்றும் 100 சதவீதம் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும் ஐடி நிறுவனங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications