அரசு குடும்பம் என்றாலே நம் அனைவருக்கும் பிரிட்டன் அரசு குடும்பம் தான் நினைவிற்கு வரும். ஆனால் உலகிலேயே தற்போது சக்தி வாய்ந்த மற்றும் அதிக சொத்துக்களுக்கு உரிமையாளராக இருக்கிறது ஒரு அரசு குடும்பம். சவுதி அரேபியாவை சேர்ந்த ஆளும் அரசு குடும்பம் 1844 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது உலகிலேயே அதிக சொத்து கொண்ட குடும்பம் இதுதான்.
இந்த குடும்பத்தில் இருப்பவர்களின் சொத்து மதிப்புகளை எல்லாம் ஒன்றாக கூட்டினால் தற்போது உள்ள உலக பணக்காரர்களின் சொத்து மதிப்புகளை விட அதிகமாக இருக்கும். குறிப்பாக சவுதி அரேபியாவின் ஜிடிபி கூட 1.11 டிரில்லியன் டாலர்கள், சவுதி அரேபியாவின் அரசு குடும்பத்தினரின் சொத்து மதிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது குறைவு தான்.

டிஎன்ஏ இந்தியா வெளியிடும் தகவலின் படி இந்த அரசு குடும்பத்தின் சொத்து மதிப்பு 1.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. சர்வதேச அளவில் பணக்கார அரசு குடும்பம் என்பதை தாண்டி சக்தி வாய்ந்த அரசு குடும்பமாகவும் சவுதி அரசு குடும்பம் இருக்கிறது. இந்த குடும்பத்தில் மொத்தம் 15 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இவர்களில் 2000 பேரிடம் பெருமளவிலான சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. 75 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட எண்ணெய் கிணறுகளும் அதன் பிறகு இந்த குடும்பத்தினர் மேற்கொண்ட ஸ்மார்ட்டான முதலீட்டு முடிவுகளுமே இவர்களின் வளமான சொத்து மதிப்புக்கு காரணம்.
இந்த குடும்பத்தின் தற்போதைய தலைவராக மன்னர் Salman bin Abdulaziz Al Saud இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவருக்கு அடுத்தபடியாக இந்த குடும்பத்தில் முக்கிய நபராக இருப்பவர் இளவரசர் Alwaleed bin Talal. இவருடைய சொத்து மதிப்பு 13.4 பில்லியன் டாலர்கள். சவுதி அரேபியா அரசு குடும்பத்தினர் இருக்கும் மாளிகை Al Yamamah என அழைக்கப்படுகிறது. 1983ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாளிகை 4 மில்லியன் சதுர அடியில் விரிந்து கிடக்கிறது.
பழங்கால கட்டிடக்கலையோடு, இத்தாலிய மார்பில் மற்றும் ஓவியங்கள் நிறைந்த சுவர்கள் என பிரம்மாண்டமாக காட்சி தருகிறது இந்த மாளிகை. ஆயிரம் அறைகள், ஆடம்பரமான சினிமா தியேட்டர், நீச்சல் குளங்கள், மசூதி என அனைத்தும் நிறைந்த ஒரு மாளிகையாக இது இருக்கிறது.
சவுதி அரசு குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கலைப் பொருட்களையும் கோடிக்கணக்கில் வாங்கி சொந்தமாக வைத்திருக்கின்றனர். பல்வேறு சொகுசு கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கும் உரிமையாளராக இருக்கின்றனர். இவர்களில் இளவரசர் முகமது பின் சல்மான் 400 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சொகுசு கப்பலுக்கு உரிமையாளராக இருக்கிறார்.
இது இரண்டு ஹெலிபேட்கள் கொண்ட ஒரு சொகுசு கப்பல் ஆகும். தங்க முலாம் பூசப்பட்ட விமானம் மற்றும் கார்களையும் இவர்கள் சொந்தமாக வைத்து இருக்கின்றனர்.
Written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications