சென்னை: அன்னையர் தினத்தன்று உணவு விநியோகத் தளமான Zomato மற்றும் வர்த்தகத் தளமான Swiggy Instamart, புத்தாண்டு அன்று தங்களுக்கு வந்த ஆர்டர்களை விட நேற்று வந்த ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
நேற்று அன்னையர் தினம் என்பதால் பலரும் தங்களுடைய அம்மாக்களுக்கு அவர்களுக்கு பிடித்த கிப்ட்டுகள் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி தருவதில் ஆர்வமாக இருந்திருப்பார்கள். அந்த வகையில் Zomato மற்றும் Swiggy Instamart போன்ற தளங்கள் அதிக அளவில் ஆர்டர்கள் பெற்று, விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சாக்லேட்கள், ஹேண்ட் பேக்குகள், பர்ஃப்யூம்கள் போன்ற பொருட்கள் அதிக அளவில் ஆர்டர் செய்ய பட்டதாகக் கூறப்படுகிறது.

முதன்முறையாக புத்தாண்டை விட அன்னையர் தினத்தில் அதிக அளவு ஆர்டர்கள் கிடைத்ததாக Zomato நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரிமான தீபிந்தர் கோயல், தனது அதிகாரப்பூர்வ X பிளாட்பார்மில் தெரிவித்துள்ளார்.
ஸோமேட்டோவின் பிளின்கிட் மற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில் சாக்லேட்கள், ஹேண்ட் பேக்குகள், பர்ஃப்யூம்கள், ரோஜா பூக்கள் போன்ற பொருட்களுக்கான தேவை அதிகரித்ததாகவும் மற்றும் நேற்றைய தினம் அவை அதிக ஆர்டர்கள் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
பெரும்பாலும் வேலைக்குச் செல்லும் அம்மாக்கள், விரும்பி வாங்கும் பொருட்களில் ஒன்று ஹேண்ட் பேக்குகள் தான். அவை நேற்று அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அன்னையர் தினத்தன்று எங்கள் விற்பனையாளர்களுடன் இணைந்து வேலை செய்து பிளின்கிட்டில் ஹேண்ட் பேக்குகளைப் பெற்று விற்பனை செய்தது மகிழ்ச்சி" என்று பிளின்கிட்டின் தலைமை நிர்வாகி அல்பிந்தர் திந்த்சா தனது அதிகாரப்பூர்வ X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல பிளின்கிட்-இல் ஸ்மார்ட் வாட்ச்கள், நகைகள் மற்றும் பர்ஃப்யூம்கள் முதல் முறையாக அன்னையர் தினத்தன்று விற்பனை அதிகரித்துள்ளது என்றும், பூங்கொத்துகளின் விற்பனை அதிகரித்ததாகவும் திந்த்சா கூறியுள்ளார்.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் தலைமை நிர்வாகி ஃபானி கிஷன் கருத்துப்படி, ஒவ்வொரு நகரங்களிலும் ஆர்டர்கள் வேறுபடுகின்றன. பெங்களூர் மற்றும் மும்பையில் ரோஜாக்கள் தான் முதன்மையான தேர்வாக இருந்தது. அதேபோல டெல்லியில் சாக்லேட்களை அதிகம் வாங்கியுள்ளனர். ஹைதராபாத்தில் வெவ்வேறு வகையான தாவரங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கியுள்ளனர். சென்னையில் கேக்குகள் தான் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டது. கொல்கத்தாவில் வாசனை திரவியங்கள் தான் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.
இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, ஒவ்வொரு ஊரிலும் தேர்வு செய்யப்பட்ட பொருட்கள் தான் மாறுபடுகின்றன. ஆனால் தங்களின் அம்மாக்களுக்கு ஏதோ ஒரு வடிவில் அன்பை செலுத்தும் விதமாக, அவர்களுடைய மகன்கள் மற்றும் மகள்கள் ஏதோ ஒரு பொருளை வழங்கி உள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications