வாகன உரிமையாளர்களே அடுத்த செலவுக்கு ரெடியா இருங்க!! இந்த கட்டணம் உயர போகுதாம்!!

சென்னை: இந்தியாவிக் வாகனங்களை வாங்குபவர்கள் அதற்கான காப்பீடு எடுப்பதும் கட்டாயமாக இருக்கிறது. இப்படி நாம் வாகன காப்பீடு வாங்கும்போது அதில் third party insurance எனப்ப்டும் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் என ஒன்று சேர்க்கப்படுகிறது.

காப்பீடு செய்யப்பட்ட வாகனத்தால் ஏற்படக்கூடிய விபத்துகளில் மூன்றாம் தரப்பினர் அவர் தனிநபரோ அல்லது தனிநபர் சொத்தோ பாதிக்கப்படும்போது அதற்கு காப்பீடு தொகை வழங்குவதற்காக தான் இந்த மூன்றாம் தரப்பு காப்பீடு என்பது சேர்க்கப்படுகிறது. இந்த மூன்றாம் தரப்பு காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை 10% வரை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வாகன உரிமையாளர்களே அடுத்த செலவுக்கு ரெடியா இருங்க!! இந்த கட்டணம் உயர போகுதாம்!!

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகமும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பான ஐஆர்டிஏஐ, மூன்றாம் தரப்பு மோட்டார் காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகையை 10% வரை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியாக மூன்றாம் தரப்பு காப்பீடு பிரிமியத்தை உயர்த்தாமல் கனரக வாகனங்களுக்கு அதிகபட்சம் மற்றும் வாகனத்தின் தன்மையை பொறுத்து பிரீமியம் தொகையை உயர்த்தலாம் என ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எக்கனாமிக் டைம்ஸுக்கு அரசு அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த பிரீமியம் தொகை என்பது குறைந்த சதவீதம் மட்டுமே உயர்த்தப்படும் எனவும் சொல்லப்படுகிறது. முன்னதாக காப்பீட்டு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் ஐஆர்டிஏஐ இடம் மூன்றாம் தரப்பு மோட்டார் காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகையை 5 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர் .

இந்த மூன்றாம் தரப்பு காப்பீட்டில் தங்களுக்கு பல மடங்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் இதன் காரணமாக பிரீமியம் தொகை உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் . கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமலேயே வசூல் செய்யப்பட்டு வருகிறது. எனவே அதனை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் 1000 சிசி வரையிலான என்ஜின் கார்களுக்கு 2,100 ரூபாய் என மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரீமியம் வசூல் செய்யப்படுகிறது. 1000 முதல் 1500 சிசி வரையிலான கார்களுக்கு 3,400 ரூபாயாக இருக்கிறது. 2024 ஆம் நிதி ஆண்டில் காப்பீட்டு நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு மோட்டார் வாகன பிரிமியம் தொகையாக மட்டும் 54, 455 கோடி ரூபாயை பெற்றுள்ளன. வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த காப்பீடு பிரிமியம் உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பிரீமியம் தொகை உயர்த்தினால் வாகன உரிமையாளர்களுக்கு தான் கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+