தொழிலில் வெற்றி பெற வேண்டுமானால், இடர்பாடுகளை நினைத்து கவலைப்படாமல் தைரியமாக களத்தில் இறங்க வேண்டும். பெரும்பாலான நடுத்தர வர்த்தக மக்கள் பெரிய வர்த்தகங்களில் ஈடுபடுவதற்கும், அதிக முதலீடு செய்வதற்கும் தயங்குகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள்.
அதேசமயம் துணிச்சலாக அதிக முதலீடு செய்து வணிகத்தில் வெற்றி பெற்றவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் பிரபல தங்க நகை நிறுவனமான மலபார் கோல்டு கம்பெனியின் நிறுவனர் எம்.பி. அகமது. ஒரு காலத்தில் மசாலா பொருட்களை விற்றவர் இன்று ரூ.27,000 கோடி மதிப்பிலான தங்க நிறுவனத்தின் அதிபராக உயர்ந்துள்ளார்.

தொழிலதிபர் (எம்.பி. அகமது) கேரள மாநிலத்தை சேர்ந்த சிறு வணிகரான குட்டி ஹாஜி-பாத்திமா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். கோழிக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பின்பு கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பி.காம் பட்டம் பெற்றார்.
1979ல் அகமது தனது 20 வயதில் கரும் மிளகு, கொத்தமல்லி, தேங்காய் வியாபாரத்தை தொடங்கினார். தொடங்கிய சிறிது காலத்திலேயே இந்த தொழில் நீண்ட காலத்துக்கு நடக்காது என்பதை உணர்ந்தார். இதனையடுத்து அடுத்த என்ன தொழில் செய்யலாம் என்பதற்கான நடவடிக்கைகளை பார்க்க தொடங்கி அப்போதைய சந்தை நிலவரத்தை ஆராய்ச்சி செய்தார்.
அப்போது எதிர்காலத்தில் தங்கம் மற்றும் நகைகள் வர்த்தகத்துக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதை அவர் கண்டறிந்தார். இதனையடுத்து உடனடியாக கோழிக்கோடில் மலபார் கோல்டு என்ற பெயரில் தங்க நகைக்கடையை தொடங்கினார். அவர் எதிர்பார்த்த மாதிரியே வர்த்தகம் நன்றாக வளர்ச்சி காண தொடங்கியது. இன்று தங்க ஆபரண துறையில் பிரபலமான பிராண்டாக மலபார் கோல்டு உருவெடுத்துள்ளது.
மலபார் கோல்டு நிறுவனம் இன்று இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஜி.சி.சி. (யு.ஏ.இ., குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா) உள்பட 11 நாடுகளில் 325 கடைகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.41,000 கோடியை தாண்டி விட்டது. மலபார் கோல்டு நிறுவனத்தின் நிறுவனர் எம்.பி. அகமதுவின் மனைவி கே.பி. சுபைதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications