தல தோனி-க்கு வந்த குட் நியூஸ்.. ஐபிஎல் போட்டிக்கு முன்பு ரூ.16 கோடி வழக்கில் முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் போட்டிகள் 22 ஆம் தேதி துவங்கும் வேளையில், முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி-க்கு மத்தியில் நடக்க உள்ளது, அதுவும் சிஎஸ்கே கோட்டையான சென்னையில் இந்த மேட்ச் நடக்க உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் போட்டி துவங்கும் முன்பு எம்எஸ் தோனி தொடுத்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

தல தோனி-க்கு வந்த குட் நியூஸ்.. ஐபிஎல் போட்டிக்கு முன்பு ரூ.16 கோடி வழக்கில் முக்கிய அறிவிப்பு..!!

இந்திய கிரிக்கெட்-ன் சூப்பர்ஸ்டாராக இருக்கும் எம்.எஸ். தோனி தனது முன்னாள் பிஸ்ன்ஸ் பார்ட்னர் மீது ரூ.16 கோடி மோசடி வழக்கைத் சில வாரங்களுக்கு முன்பு தொடுத்தார். இந்த வழக்கில், தோனியின் முன்னாள் கூட்டாளிகளான ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட் சேர்ந்த மிஹிர் திவாகர், சௌம்யா விஸ்வாஸ் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப ராஞ்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது, இதனால் தோனிக்கு தரப்பு முதல் வெற்றி கிடைத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

தோனி தரப்பு வழக்கறிஞர் வெளியிட்டுள்ள தகவல்படி, கிரிக்கெட் அகாடமி நிறுவுவதற்கான தோனி மற்றும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட்-ன் 2 பிஸ்னஸ் பார்ட்னர் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது, இந்த ஒப்பந்த விதிமுறைகளை நிறைவேற்றத் தவறியதன் மூலம் தோனி-க்கு சுமார் ரூ.16 கோடி மோசடி செய்ததாக பிஸ்னஸ் பார்ட்னர் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

தற்போது ராஞ்சி நீதிமன்றம் புதன்கிழமை சம்மன் அனுப்ப உத்தரவிட்டது இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடரப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 406 (நம்பிக்கை மீறல்) மற்றும் 420 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தோனியின் வழக்கறிஞர் தயானந்த் சிங் PTI செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

தோனியுடன் பணம் பகிர்ந்து கொள்ளாமல், அவருடன் ஒப்பந்தம் செய்த ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட் சேர்ந்த மிஹிர் திவாகர், சௌம்யா விஸ்வாஸ் பிஸ்னஸ பார்ட்னர்கள் தோனியின் பெயரில் எட்டு முதல் பத்து இடங்களில் அகாடமி தொடங்கி, தோனிக்கு ரூ.16 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர் குற்றம் சாட்டி, வழக்கு கொடுக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு, கிரிக்கெட் அகாடமி நிறுவுவதற்காகவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிளைகளைத் திறப்பதற்காகவும், தோனி உடன் அந்த நிறுவன இயக்குநர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, பிரான்சைசி கட்டணம் முழுமையாக தோனி பெறுவார், லாபத்தில் 70% தோனிக்கும், 30% அவரது கூட்டாளிகளுக்கும் பிரித்து கொள்ளப்படும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது என்று தோனியின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். இந்த விதிமுறைகள் சரியாக பின்பற்றாத காரணமாக தோனிக்கு 16 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+