ஐபிஎல்-ஐ விடுங்க.. MS தோனி பெங்களூரில் செய்த விஷயத்தை பார்த்தீங்களா..!!

எம்எஸ் தோனி 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவது உறுதியானது பல கோடி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதோடு எம்எஸ் தோனி பெங்களூரில் சைலென்டாக ஒரு சம்பவம் செய்துள்ளார்.

2023 ஐபிஎல் தான் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் என அனைவரும் கூறிவந்த நிலையில் போட்டியின் முடிவில் ரசிகர்களுக்காக தான் அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவதாகவும், ஆனால் அதற்கு என்னுடைய பிட்னஸ் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.

ஐபிஎல்-ஐ விடுங்க.. MS தோனி பெங்களூரில் செய்த விஷயத்தை பார்த்தீங்களா..!!

கடந்த சில மாதங்களாக பல சிகிச்சைகள், பல வெளிநாட்டு பயணங்களை தொடர்ந்து தோனி பிட்டாக இருந்தது சமீபத்தில் நடந்த கியூட் போட்டோ ஷூட் மூலம் தெரிந்தது. இந்த நிலையில் தோனி 2024 ஐபிஎல் போட்டியில் விளையாடுவது உறுதியாகி அறிவிப்பு வெளியானது.

எம்எஸ் தோனி கிரிக்கெட் வீரர் மட்டும் அல்லாமல் கடந்த 8 வருடத்தில் மிகப்பெரிய தொழிலதிபாராக மாறியுள்ளார். திரைப்படம் தயாரிப்பது, பள்ளிகளை திறப்பது முதல் ஸ்டார்ட்அப் முதலீடு, பிராண்ட் என்டோர்ஸ்மென்ட் வரையில் பல வகையில் பணத்தை முதலீடு செய்தும் பெரிய அளவில் சம்பாத்து வருகிறார்.

இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் மறுசீரமைப்பு செய்து வரும் பிசியான காலக்கட்டத்திலும் வழக்கம் போல் தனக்கே உரித்தான ஸ்மார்ட்னஸ் உடன் புதிய முதலீடுகளை செய்து விளையாட்டு துறையை மட்டும் அல்லாமல் ஸ்டார்ட்அப் துறையையும் அதகளப்படுத்தியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி பெங்களூருவை தளமாகக் கொண்ட ஃபிட்னஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான டக்டா ரஹோ-வில் (Tagda Raho) முதலீடு செய்துள்ளார். இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் எம்எஸ் தோனி எவ்வளவு முதலீடு செய்தார், தோனி எவ்வளவு பங்குகளை வாங்கியுள்ளார் என்பது வெளியிடப்படவில்லை.

தக்தா ரஹோவின் நிறுவனர் ரிஷப் மல்ஹோத்ரா, கிரிக்கெட் வீரர்கள் தங்களின் உடற்தகுதியை சிறப்பாக பேணிக்காப்பது போல் இந்திய மக்களும் தங்களின் உடல் தகுதியை மேம்படுத்தும் வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஐடியாவில் இம்பிரஸ் ஆன தோனி முதலீடு செய்துள்ளார்.

எம்எஸ் தோனி கிரிக்கெட் வீரர் மட்டும் அல்லாமல் கடந்த 8 வருடத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக மாறியுள்ளார். திரைப்படம் தயாரிப்பது, பள்ளிகளை திறப்பது முதல் ஸ்டார்ட்அப் முதலீடு, பிராண்ட் என்டோர்ஸ்மென்ட் வரையில் பல வகையில் பணத்தை முதலீடு செய்தும் பெரிய அளவில் சம்பாதித்து வருகிறார்.

தக்தா ரஹோவின் நிறுவனர் ரிஷப் மல்ஹோத்ரா, கிரிக்கெட் வீரர்கள் தங்களின் உடற்தகுதியை சிறப்பாக பேணிக்காப்பது போல் இந்திய மக்களும் தங்களின் உடல் தகுதியை மேம்படுத்தும் வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஐடியாவில் இம்ப்ரஸ் ஆன தோனி முதலீடு செய்துள்ளார்.

தக்தா ரஹோ நிறுவனம் ரிஷப் மல்ஹோத்ரா என்பவரால் பெங்களூரில் துவங்கப்பட்டு உள்ளது. டக்அவுட்(Dugout) என்ற பெயரில் தனது பயிற்சி மையத்தை வைத்துள்ளது தக்தா ரஹோ. பாரம்பரிய உபகரணங்களைப் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பயன்படுத்தும் முறையை தக்தா ரஹோ பின்பற்றுவதால் பலரையும் கவர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+