இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிக்கு அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் புதிய ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு வந்துள்ளது. ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தோனிக்கு இந்த அழைப்பு தரப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தான் மற்றொரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு இதே அழைப்பு தரப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க் கோ பிராவின்ஸ் செக்ரட்டரி தனஞ்ஜெய் சிங் தோனிக்கு அழைப்பை வழங்கினார். அப்போது பாஜக மாநில பொதுச்செயலாளர் கர்மவீர் சிங் உடனிருந்தார்.

கோயில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்பார்வையில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ ராமர் ஜென்மபூமி வளாகத்தில் உள்ள குபேர் நவரத்ன திலாவுக்குச் சென்று, ஜடாயுவின் வெண்கலச் சிலையைத் திறந்து வைத்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி, பிரான் பிரதிஷ்டா விழாவுக்குத் தலைமை தாங்குகிறார்.
கோயில் திறப்புவிழாவுக்கு வருகை தரும் விருந்தினர்களை வரவேற்கும் வேலைகளை ராமர் ஜென்மபூமி தீர்த்த க்ஷேக்ர டிரஸ்ட் செய்து வருகிறது. சிறப்பு விருந்தினர்களுக்கு ராம ராஜ்ஜியம் என்ற சிறப்பு பரிசுகள் வழங்கப்படவிருக்கிறது. கோயில் திறப்பு விழாவன்று சிறப்பு மோடிசூர் லட்டுகள் பிரசாதமாக விருந்தினர்களுக்கு தரப்படும்.
எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர் உள்பட 11,000 பேருக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தோனி, சச்சின் தவிர சர்வதேச தடகள வீரர்களான நீரஜ் சோப்ரா, பிவி சிந்து, ஜாக்கி ஷெராப், ரண்பீர் கபூர், ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கும் அழைப்பு தரப்பட்டுள்ளது.
தற்போது எம்எஸ் தோனி விளையாட்டில் இருந்து ஒதுங்கி நேரத்தை செலவிட்டு வருகிறார். எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக்- ஐபிஎல் போட்டிக்கும் அவர் தயாராகி வருகிறார். இது தோனியின் கடைசி சீஸன் ஐபிஎல்லாக இருக்கும் எனத் தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2023இல் தலைமை தாங்கி நடத்தினார் தோனி.
இதனிடையே ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்று தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதும் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச மாநில அரசு அதிகாரிகள் முனைப்புடன் செய்து வருகின்றனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications