தோனிக்கு இது தான் கடைசி சீசன் என ஒவ்வொரு சீசனிலும் தகவல் பரப்பப்படும் நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் 2025 சீசனிலும் தோனி தனது 43 வது வயதில் விளையாடுகிறார். 12 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த தோனி மற்ற வீரர்களுக்கு பெரிய அளவு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தம்மை புதிய விதி மூலம் மாற்றிக்கொண்டு சம்பளத்தை வெறும் 4 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டார். இந்தாண்டு தான் தோனிக்கு கடைசி சீசன் என்று பலரும் கூறிவரும் நிலையில், மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு குறித்து பரவி வரும் வதந்திகளை தன் பாணியில் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தனது குடும்பம் போன்றது என்றும், முடிந்தவரை தொடர்வேன் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கு முன்னதாக, JioCinema-க்குக் கொடுத்த பேட்டியில் தனது ஓய்வு குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், "CSK-க்காக நான் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம். அது என் அணியல்ல, என் குடும்பம், நான் வீல்செயரில் இருந்தாலும் கூட, அவர்கள் என்னை களத்திற்கு இழுத்துக்கொண்டு சென்று விடுவார்கள்!" என்று CSK அணியுடன் உள்ள ஆழமான தொடர்பை உருக்கமாக வெளிப்படுத்தினார்.
ஓராண்டுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் தோனி: மகேந்திர சிங் தோனி ஏறக்குறைய ஒரு வருட இடைவெளிக்கு பின் முதன்முறையாக ஐபிஎல் 2025 18வது சீசனில் களமிறங்க உள்ளார். தோனி கடைசியாக ஐபிஎல் 17 சீசனில் பங்கேற்றார். அதன்பிறகு ஓய்வெடுத்து இருந்த தோனி, இப்போது மீண்டும் மஞ்சள் ஜெர்ஸியில் களம்காண்கிறார். தோனி தற்போது CSK அணியின் அதிகாரப்பூர்வ கேப்டன் அல்ல என்று கூறியிருந்தாலும், அணியின் ஒவ்வொரு முடிவிலும் அவரது தாக்கம் தெளிவாக தெரிகிறது. அதாவது, அணியில் யார் இருக்க வேண்டும், எப்படி அணியை கட்டமைக்க வேண்டும் என்பதில் தோனியின் தாக்கம் தெளிவாக தெரிகிறது. போட்டியின்போது களமிறங்கும் 11 வீரர்களின் (பிளேயிங் 11) தேர்விலும், அவரது அனுபவம் வழிகாட்டுகிறது. CSK-வின் அணிச் சூழ்நிலை, "Cool & Composed" அணுகுமுறை, தோனியின் பாணியை பிரதிபலிக்கிறது.
விக்கெட் கீப்பராக இருப்பது மட்டுமல்ல, ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து தோனி பந்துவீச்சாளர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் CSK-வின் ரகசிய ஆயுதமாக மாறியுள்ளது. அதாவது, ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்று, பேட்ட்ஸ்மேன்களின் செயல்பாட்டை கணிக்கிறார். அவர்களின் அடுத்த பந்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை உணர்ந்து, பந்துவீச்சாளர்களுக்கு உகந்த ஆலோசனைகளை தருகிறார்.
முன்னதாக, ஐபிஎல் 2025 சீசன் நேற்று சனிக்கிழமை துவங்கியது, அதில் நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் ஆட்டத்திலேயே முதல் வெற்றிப்பெற்றது. இருப்பினும், அனைவரின் கவனம் ஒரு பெரிய மோதலின் மீதுதான். அதுதான் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐந்து முறை சாம்பியன்கள் CSK & MI இரு பிரம்மாண்ட அணிகள் மோதும் தருணம். தான் ஐபிஎல் ரசிகர்களை மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் கேப்டன்கள் தோனி மற்றும் ரோஹித் இருவரும் ஐபிஎல்லில் நீண்ட காலம் அணிகளை வழிநடத்தினர். ஆனால் இப்போது ஐபிஎல்லில் ஒரு புதிய யுகம் பிறந்துள்ளது, அதாவது, இது ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தம், இங்கு இளைஞர்கள் தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். தோனி CSK-யை 2008 முதல் வழிநடத்தினார், ரோஹித் 2013 முதல் MI-யை சாம்பியன் ஆக்கியுள்ளார். ஆனால் இப்போது, IPL-ல் இளம் தலைமுறைகள் தலைமையை ஏற்று, அணிகளை புதிய உச்சத்துக்கு செல்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் தனது ஆறாவது ஐபிஎல் கோப்பையை நோக்கி சூர்ய குமார் தலைமையில் பயணிக்கிறது, அதே நேரத்தில் ருதுராஜ் கெய்க்வாட் CSK-வின் புதிய வழிகாட்டியாக உள்ளார். இரு அணிகளிலும் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், தியாக் வர்மா, ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற ரசிகர்களின் விருப்பமான வீரர்கள் இருப்பதால், ரசிகர்கள் இந்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடிடம் தோனியின் இறுதி சீசன் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் மகிழ்ச்சியான பதில் அளித்தார். "சச்சின் டெண்டுல்கர் கூட 50 வயதிலும் அதே நிலைமையில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். எனவே, தோனி இன்னும் பல ஆண்டுகள் விளையாடுவார்! என்று கூறினார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications