உலகின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான MSC அண்ணா, மே 26 அன்று முந்த்ரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு அதானி துறைமுகங்கள் மற்றும் இந்தியாவின் கடல்சார் தொழில்துறை ஆகிய இரண்டிற்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி கடந்த 5 வருடத்தில் நாட்டின் பல பகுதியில் இருந்து பல துறைமுகத்தைக் கைப்பற்றி நாட்டின் மிகப்பெரிய துறைமுக நிறுவனமாக உருவெடுத்துள்ளது அதானி போர்ட்ஸ்.

அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, MSC அண்ணா 399.98 மீட்டர் நீளம் மற்றும் 19,200 TEUs (இருபது-அடி சமமான அலகுகள்) திறன் கொண்டது. இது இந்தியத் துறைமுகத்திற்குச் செல்லும் திறன் அடிப்படையில் மிகப்பெரிய கொள்கலன் அதாவது கண்டைனர் கப்பலாகும்.
MSC அண்ணா முந்த்ரா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும் காலத்தில், சுமார் 12,500 TEU எடை கொண்ட சரக்குகளை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய அளவிலான சரக்குகளைத் திறம்பட நிர்வகிக்கும் முந்த்ரா துறைமுகத்தின் திறனை MSC ANNA கப்பலின் வருகையைக் காட்டுகிறது.
கப்பலின் வருகை வரைவு அதாவது arrival draft 16.3 மீட்டர் ஆகும், இத்தகைய பெரும் கப்பலை இந்தியாவில் முந்த்ரா துறைமுகத்தில் மட்டுமே இடமளிக்க முடியும், ஏனெனில் இந்தியாவின் வேறு எந்த துறைமுகமும் இந்த அளவு ஆழமான வரைவு கப்பலை நிறுத்த முடியாது.
ஜூலை 2023 இல், அதானி போர்ட்ஸின் முந்த்ரா துறைமுகத்தில் MV MSC ஹாம்பர்க் கப்பல் நிறுத்தப்பட்டது. 399 மீட்டர் நீளம் மற்றும் 16,652 TEU திறன் கொண்ட இந்த கப்பல் உலகின் மிக நீளமான கண்டைனர் கப்பல்களில் ஒன்றாகும்.
ஜூன் மாதத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டில் அதானி போர்ட்ஸ் சேர்க்கப்பட உள்ளது. இதேபோல் விப்ரோ நிறுவனம் சென்செக்ஸ் குறியீட்டில் இருந்து வெளியேற போகிறது. இந்த மாற்றம் இந்தியச் சந்தையில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் வளர்ந்து வருவதை காட்டுகிறது.
இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பில் முந்த்ரா துறைமுகம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. MSC அண்ணா மற்றும் MV MSC ஹாம்பர்க் ஆகியவற்றின் வருகை மூலம் உலகின் மிகப்பெரிய கப்பல்கள் சிலவற்றைக் கையாளும் திறனை முந்த்ரா துறைமுகம் பறைசாற்றியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications