இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தனிப்பட்ட கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்டிருக்கும் வேளையில், விழாக்களும், கொண்டாட்டமும் மாறுப்படும். இந்த நிலையில் நாடு முழுக்க கொண்டாடப்படும் விழாக்கள் வெகு சில மட்டுமே. இப்படி இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாக விளங்குவது தீபாவளி.
இந்த தீபாவளி தினம் கொண்டாட்டத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதேவேளையில் முதலீட்டுக்கு முக்கியம். தீபாவளி பண்டிகை நாளில் பங்குச்சந்தைகள், முதலீட்டு சந்தைகள் விடுமுறை என்றாலும், ஒரு மணிநேரம் சிறப்பு வர்த்தகம் நடக்கும். தீபாவளி தினம் செல்வத்திற்கான அதிபதி லட்சுமி தேவியின் திருநாளாக பார்க்கப்படும் காரணத்தால் ஒவ்வொரு வருடமும் ஒரு மணிநேரம் முகூர்த்த வர்த்தகம் நடக்கும்.

தேசிய பங்கு பரிவர்த்தனை (NSE) மற்றும் மும்பை பங்கு பரிவர்த்தனை (BSE) ஆகியவை அக்டோபர் 21, 2025 அன்று மதியம் 1:45 முதல் 2:45 மணி வரை ஒரு மணி நேர சிறப்பு வர்த்தக அமர்வை நடத்துகின்றன. இந்த அமர்வு, 'முகூர்த்த வர்த்தகம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்து புராணங்களின்படி, செல்வத்தின் தெய்வமான லட்சுமி மற்றும் தடைகளை நீக்கும் கணபதியின் ஆசிகளைப் பெறுவதற்கு இந்த நாள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் இந்த அமர்வை புதிய வர்த்தகங்களைத் தொடங்குவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர், இது முதலீட்டு வளர்ச்சிக்கும் லாபத்தை பெறவும் நல்ல தொடக்கத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை தாண்டி இந்து நிதியாண்டின் தொடக்கமாகவும் திகழ்கிறது. அக்டோபர் 21ஆம் தேதி சம்வத் 2082 துவங்குகிறது, இதை வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் லாபகரமானதாக மாற்றும் நோக்கிலேயே இந்த சிறப்பு வர்த்தகம் காலம் காலமாக நடத்தப்படுகிறது.
விக்ரமாதித்யா மன்னரால் கி.மு. 57-ல் தொடங்கப்பட்டது தான் இந்த இந்து நாட்காட்டி, புதிய ஆண்டான சம்வத் 2082-ஐ குறிக்கும் விதமாக முகூர்த்த வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த ஒரு மணி நேர முகூர்த்த வர்த்தக அமர்வு, பல்வேறு பிரிவுகளில் நடைபெறுகிறது.
இதில் ஈக்விட்டி, கமாடிட்டி, டெரிவேட்டிவ்ஸ், கரன்சி டெரிவேட்டிவ்ஸ், ஈக்விட்டி பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ், செக்யூரிட்டீஸ் லெண்டிங் அண்ட் பாரோயிங் வர்த்தகம் என அனைத்தும் நடக்கும். இந்த அனைத்து வர்த்தகங்களும் ஒரே நேரத்தில், அதாவது மதியம் 1:45 முதல் 2:45 மணி வரை நடைபெறும்.
இந்த முகூர்த்த வர்த்தகம், பொதுவாக குறைந்த அளவு வர்த்தகத்தைக் கொண்டிருந்தாலும், வலுவான லாபத்தை அளிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் அமைகிறது. பல வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த நாளில் திட்டமிட்டு நீண்ட காலம் மற்றும் கட்டாயம் லாபம் ஈட்டும் பங்குகளில் முதலீடு செய்யும் காரணத்தால் விற்பனை குறைவாக இருக்கும். இதனால் பெரும்பாலான வர்த்தகம் லாபத்துடனே முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஓரே நாளில் 6.5 லட்சம் கோடி இழப்பு.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications