திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது திருப்பதி ஏழுமலையான் தான்.
மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் திருப்பதி ஏழுமலையான் மீது தீரா நம்பிக்கை இருக்கும் காரணத்தால் வருடத்தில் ஒரு முறையாவது நேரில் சந்தித்து வழிப்படும் வழக்கத்தைக் கொண்டு உள்ளனர்.
சொல்லப்போனால் பல தொழிலதிபர்கள் தங்களின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைத் திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கையாக அளிக்கும் வழக்கத்தையும் கொண்டு உள்ளனர்.
இப்படியிருக்கையில் இந்தியாவின் 2வது பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி வெள்ளிக்கிழமை திருப்பதி வந்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி வெள்ளிக்கிழமை சுமார் 1.5 கோடி ரூபாயைப் பணத்தை ஆந்திரா-வில் உள்ள திருப்பதி திருமலை-யில் வெங்கடேஸ்வரா கோயிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
திருப்பதி
திருப்பதி மலையில் இருக்கும் பெருமாளை அவ்வப்போது நேரில் சென்று வழிப்பட்டு வரும் முகேஷ் அம்பானி தனது சொத்துக்களையும், வர்த்தகத்தையும் பிள்ளைகள் கையில் ஒப்படைத்த நிலையில் இன்று காலை திருமலை வெங்கடேஸ்வரரை வழிபட்டு 1.5 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.
ராதிகா மெர்ச்சன்ட்
திருப்பதி மலையில் இருக்கும் வெங்கடேஸ்வராரின் தீவிர பக்தரான முகேஷ் அம்பானி, என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட்-ன் மகள் ராதிகா மெர்ச்சன்ட் (முகேஷ் அம்பானி-யின் வருங்கால மருமகள்) மற்றும் பிற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிகாரிகள் உடன் வெள்ளிக்கிழமை அதிகாலையில் திருப்பதி கோவிலுக்கு வந்ததுள்ளார்.
1.5 கோடி ரூபாய்
மூலவரை வழிபாட்டிற்குப் பிறகு, முகேஷ் அம்பானி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் சுமார் 1.5 கோடி ரூபாய்க்கான காசோலையை TTD கூடுதல் செயல் அதிகாரி வெங்கட தர்ம ரெட்டியிடம் கோவிலேயே வழங்கியுள்ளார். ராதிகா மெர்ச்சன்ட் வந்த நிலையில் அவரை மணக்கும் அனந்த் அம்பானி வரவில்லை.
யானைகள்
திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கிய பிறகு, அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் பலர், வெங்கடேசப் பெருமாளுக்குச் சுமார் ஒரு மணி நேர பூஜை-யில் கலந்து கொண்டனர். மேலும் கோவிலை விட்டு வெளியேறும் முன், அம்பானி கோவிலில் யானைகளுக்கு உணவளித்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications