திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது திருப்பதி ஏழுமலையான் தான்.
மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் திருப்பதி ஏழுமலையான் மீது தீரா நம்பிக்கை இருக்கும் காரணத்தால் வருடத்தில் ஒரு முறையாவது நேரில் சந்தித்து வழிப்படும் வழக்கத்தைக் கொண்டு உள்ளனர்.
சொல்லப்போனால் பல தொழிலதிபர்கள் தங்களின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைத் திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கையாக அளிக்கும் வழக்கத்தையும் கொண்டு உள்ளனர்.
இப்படியிருக்கையில் இந்தியாவின் 2வது பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி வெள்ளிக்கிழமை திருப்பதி வந்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி வெள்ளிக்கிழமை சுமார் 1.5 கோடி ரூபாயைப் பணத்தை ஆந்திரா-வில் உள்ள திருப்பதி திருமலை-யில் வெங்கடேஸ்வரா கோயிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
திருப்பதி
திருப்பதி மலையில் இருக்கும் பெருமாளை அவ்வப்போது நேரில் சென்று வழிப்பட்டு வரும் முகேஷ் அம்பானி தனது சொத்துக்களையும், வர்த்தகத்தையும் பிள்ளைகள் கையில் ஒப்படைத்த நிலையில் இன்று காலை திருமலை வெங்கடேஸ்வரரை வழிபட்டு 1.5 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.
ராதிகா மெர்ச்சன்ட்
திருப்பதி மலையில் இருக்கும் வெங்கடேஸ்வராரின் தீவிர பக்தரான முகேஷ் அம்பானி, என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட்-ன் மகள் ராதிகா மெர்ச்சன்ட் (முகேஷ் அம்பானி-யின் வருங்கால மருமகள்) மற்றும் பிற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிகாரிகள் உடன் வெள்ளிக்கிழமை அதிகாலையில் திருப்பதி கோவிலுக்கு வந்ததுள்ளார்.
1.5 கோடி ரூபாய்
மூலவரை வழிபாட்டிற்குப் பிறகு, முகேஷ் அம்பானி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் சுமார் 1.5 கோடி ரூபாய்க்கான காசோலையை TTD கூடுதல் செயல் அதிகாரி வெங்கட தர்ம ரெட்டியிடம் கோவிலேயே வழங்கியுள்ளார். ராதிகா மெர்ச்சன்ட் வந்த நிலையில் அவரை மணக்கும் அனந்த் அம்பானி வரவில்லை.
யானைகள்
திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கிய பிறகு, அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் பலர், வெங்கடேசப் பெருமாளுக்குச் சுமார் ஒரு மணி நேர பூஜை-யில் கலந்து கொண்டனர். மேலும் கோவிலை விட்டு வெளியேறும் முன், அம்பானி கோவிலில் யானைகளுக்கு உணவளித்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications