உலகம் முழுவதும் Fossil Fuel எனப்படும் புதைபடிவ எரிபொருட்களை அடிப்படையாக தான் தனது பொருளாதாரம், வர்த்தகத்தை கட்டமைத்து வந்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக மாற்று எரிசக்தி, கிளீன் எனர்ஜி, கிரீன் எனர்ஜி என பல பெயர்களில் உலகமே தற்போது ரினியூவபிள் எனர்ஜி பாதையை தேர்ந்தெடுத்து பயணித்து வருகிறது.
இது மட்டும் அல்லாமல் உலக நாடுகள் கார்பன் வெளிப்பாட்டை குறைக்கும் வகையில் நெட் ஜீரோ நிலையை அடைவதற்கான இலக்கையும் நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் தற்போது ரினியூவபிள் எனர்ஜி துறை அதிகப்படியான பணம் புழங்கும் துறையாக மாறியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில் சுமார் 25 ஜிகாவாட் ரினியூவபிள் பவர் உருவாகும் மாபெரும் திட்டத்தை உருவாக்க உள்ளதாக இந்திய பில்லியனர்களான முகேஷ் அம்பானியும் கௌதம் அதானியும் தெரிவித்தனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆந்திர மாநிலத்தில் 10 ஜிகாவாட் சூரிய சக்தியை உருவாக்கும் என்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, வெள்ளிக்கிழமை மாநிலம் ஏற்பாடு செய்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
அதானி போர்ட்ஸ்
அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி கரண் அதானி, அடுத்த சில ஆண்டுகளில் ஆந்திராவில் ஐந்து மாவட்டங்களில் 15 ஜிகாவாட் அளவிலான ரினியூவபிள் எனர்ஜி கட்டமைப்புகளை உருவாக்க தனது குழு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசத்தில் இந்தத் திட்டங்களுக்கான முகேஷ் அம்பானியும், கரண் அதானியும் எவ்வளவு முதலீட்டு செய்ய உள்ளனர் என்பகை இரு வர்த்தக சாம்ராஜ்ஜியங்களும் வெளியிடவில்லை. 2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் டாவோஸ்-ல் நடந்த முக்கியமான வர்த்தக கூட்டத்தில் ஆந்திர முதல்வர், கௌதம் ஆதானி 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டத்திற்கு MoU கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தனது மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு அடிப்படையில் கட்டமைத்த நிலையில் கடந்த சில வருடங்களாக எதிர் திசையில் அதாவது கிரீன் எனர்ஜி துறையில் 75 பில்லியன் டாலர் முதலீடு செய்ய தயாராகியுள்ளது.
கௌதம் அதானி
இதேபோல் நிலக்கரி, அனல் மின்நிலையம் என புதைபடிவ எரிபொருட்களை அடிப்படையாக கொண்ட வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமம் சுமார் 70 பில்லியன் டாலர் அளவிலான தொகையை கிரீன் எனர்ஜியில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆந்திர முதலீடுகள்
ஆந்திராவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே KG-D6 basin-ல் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதேபோல் அதானி குழுமம் 10 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட இரு சிமெண்ட் தொழிற்சாலையை ஆந்திராவில் கொண்டு உள்ளது. தற்போது 25 ஜிகாவாட் ரினியூவபிள் பவர் உருவாகும் திட்டம் புதிய திட்டமாக உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications