எலான் மஸ்க்-கிற்கு டேக்கா கொடுத்த முகேஷ் அம்பானி.. சாட்டிலைட் பிராட்பேண்ட் சேவைக்கு ஒப்புதல்..!!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் டெலிகாம் பிரிவான ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனமும், லக்சம்பர்கைச் சேர்ந்த எஸ்.ஈ.எஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் செயற்கைக்கோள்கள் வழியாக அதிவேக இண்டர்நெட் சேவைகளை வழங்கும் திட்டத்திற்கு முக்கியமான ஒப்புதல் கிடைத்துள்ளது.

ஏர்டெல் கூட்டணியைத் தொடர்ந்து இந்தியாவில் இப்பிரிவில் அனுமதி வாங்குவது யார் என்பதில் எலான் மஸ்க் ஸ்பேக்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சேவைக்கும், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்கும் பெரும் போட்டி நிலவியது. இதில் எலான் மஸ்க்-கிற்கு டேக்கா கொடுத்த முகேஷ் அம்பானி வென்றுள்ளார்.

எலான் மஸ்க்-கிற்கு டேக்கா கொடுத்த முகேஷ் அம்பானி.. சாட்டிலைட் பிராட்பேண்ட் சேவைக்கு ஒப்புதல்..!!

முகேஷ் அம்பானி-யின் கூட்டணி இந்தியாவில் செயற்கைக்கோள்கள் வழியாக அதிவேக இண்டர்நெட் சேவைகளை வழங்க ஒப்புதல் பெற்றுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் ஒரு அரசு அதிகாரி கொடுத்த தகவல் மையப்படுத்தி ராய்ட்டர்ஸ் இத்தகவலை வெளியிட்டு உள்ளது.


ராய்ட்டர்ஸ் அளித்துள்ள தகவல் படி இந்தியாவில் செயற்கைக்கோள் வழியாக இண்டர்நெட் சேவையை வழங்க 'ஆர்பிட் கனெக்ட் இந்தியா' என்ற நிறுவனத்திற்கு மூன்று ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியத் தேசிய விண்வெளி மேம்பாட்டு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கிய இந்த அனுமதிகள், ஆர்பிட் கனெக்ட் நிறுவனம் இந்திய நிலப்பரப்புக்கு மேலே செயற்கைக்கோள்களை நிறுவுவதற்கு அனுமதி அளிக்கிறது.

இருப்பினும் செயற்கைக்கோள்கள் வழியாக அதிவேக இண்டர்நெட் சேவைகளை வழங்குவதற்கு முன்னர் மத்திய தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து கூடுதல் அனுமதிகள் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் செயற்கைக்கோள் வாயிலாக இண்டர்நெட் சேவை வழங்கும் வர்த்தகத்தில் நுழைய பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது. இதில் முக்கியமாக அமேசான் மற்றும் எலான் மஸ்க் நிறுவனத்தின் Starlink போன்ற நிறுவனங்களும் தற்போது அனுமதி கோரி வருகின்றன.

IN-SPACe தலைவர் பவன் கோயங்கா கூறுகையில், செயற்கைக்கோள்களை இயக்குவதற்கான அனுமதி இன்மார்சாட் மற்றும் பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் 36% வளர்ச்சியுடன், 2030 ஆம் ஆண்டில் ரூ.1.9 பில்லியன் வருவாய் ஈட்டும் துறையாக இந்திய செயற்கைக்கோள் பிராட்பேண்ட் துறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+