ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சமீப காலமாகச் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருவதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் திங்களன்று ரிலையன்ஸ் பங்குகள் 2,883 ரூபாய் விலையில் முடிவடைந்த பின்னர், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
இதன் எதிரொலியாக இன்று வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் பங்குகள் 3027.50 ரூபாய் என்ற விலையில் திறந்து, புதிய வரலாற்று உச்ச விலையான 3,075 ரூபாயை அடைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

பங்குச்சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி, ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் வருவாய் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பே இந்த பங்கு விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
வலுவான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல், டெக்ஸ்டைல் மற்றும் டெலிகாம் துறைகளில் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் பங்கு விலை நிலையான முறையில் 3,080 ரூபாயை கடந்து சென்ற நிலையில், விரைவில் 3,170 ரூபாயை தொட வாய்ப்புள்ளது எனவும் சந்தை முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் பசவ் கேப்பிடல் நிறுவனர் சந்தீப் பாண்டே, ரிலையன்ஸ் பங்கு விலை உயர்வு குறித்து பேசுகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அனைத்து பிரிவுகளிலும் வருவாய் அதிகரிப்பு இருக்கும் என சந்தை எதிர்பார்க்கிறது. இந்தியாவில் வலுவான பொருளாதார வளர்ச்சியும், பருவ மழை குறித்த கணிப்புகள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட நாட்டின் அனைத்து முன்னணி இந்திய நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது.
டெக்ஸ்டைல், பெட்ரோ கெமிக்கல், தொலைத்தொடர்பு மற்றும் ரீடைல் துறைகள் அனைத்தும் வரும் காலாண்டுகளில் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிற்குப் பிறகு பங்குகளில் புதிய உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நம்பப்படுவதாக சந்தீப் பாண்டே கூறினார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications