அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு விமானம் வெள்ளிக்கிழமை 174 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த வேளையிலேயே அதன் கதவு திடீரென உடைந்து நடுவானில் இருக்கும்போதே வெளியே பறந்துள்ளது, இதனுடன் அடுத்த சில நொடியில் ஒரு இருக்கையும் உடைந்து வெளியே பறந்து.
இதைத்தொடர்ந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த பணிகளும், 6 பணியாளர்களும், அமெரிக்காவின் போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் அவசரமாக விமானத் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போயிங் 737-9 Max ரகமாகும்.

இதே போயிங் 737-9 Max ரக விமானத்தைத் தான் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பயன்படுத்தி வருகிறது என ஈடி பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி மட்டுமே இந்தியாவில் போயிங் 737-9 Max ரக விமானத்தைக் கார்பரேட் ஜெட் ஆகப் பயன்படுத்தி வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
முகேஷ் அம்பானி-யின் போயிங் 737-9 Max ரக விமான T7-LOTUS என்ற பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உள்ளது, இந்த விமானம் ரிலையன்ஸ் லோகோ உடன் பெயின்டிங் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தங்களுடைய போயிங் விமானத்தைக் குறித்து இதுவரையில் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கடந்த ஆண்டுத் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கார்ப்ரேட் போக்குவரத்தில் போயிங் 737-9 Max விமானத்தைச் சேர்த்தது. ரிலையன்ஸ் நிறுவனத்திடம் Embraer SA ERJ 145 மற்றும் Airbus SE A319 ஆகிய இரு விமானங்களும், Dauphin மற்றும் Sikorsky ரக ஹெலிகாப்படர்களும் உள்ளது.

போயிங் 737-9 Max ரக விமானத்தை அதிகளவில் வைத்துள்ள நிறுவனங்களில் அலாஸ்கா ஏர், யுனைடெட் ஏர்லையன்ஸ் ஹோல்டிங்க்ஸ், பனாமா கோபா ஏர்லைன்ஸ், ஃப்ளைதுபாய், ஏரோமெக்சிகோ, ஏர் டான்சானியா ஆகியவை வைத்துள்ளது.
இதேபோல் இந்தியாவில் போயிங் 737-9 Max மற்றும் போயிங் 737-8 Max ரக விமானங்களை வைத்திருக்கும் இந்திய நிறுவனங்களை உடனடியாகச் செக் செய்துவிட்டு அறிக்கை கொடுக்கும் படி அலாஸ்கா சம்பவத்திற்குப் பின்பு இந்திய சிவில் ஏவியேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பின்பு அமெரிக்காவில் 600 விமானங்களின் பயணம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 4 போயிங் 737-9 Max விமானங்களை வைத்துள்ளது, இதேபோல் ஸ்பைஸ்ஜெட் 8 விமானங்களையும், அகாசா 20 விமானங்களையும் வைத்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications