குஜராத்: முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் உலகின் மிகப்பெரிய டேட்டா சென்டரை குஜராத்தில் அமைக்க இருப்பது தெரியவந்துள்ளது. ப்ளூம்பெர்க் நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் குஜராத்தின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் குழுமம் உலகின் மிகப்பெரிய டேட்டா சென்டரை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் குழுமம் அண்மைக்காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக டேட்டா சென்டர்களை அமைக்கும் பணியை ரிலையன்ஸ் குழுமம் தீவிர படுத்தியுள்ளது. தன்னுடைய டேட்டா சென்டருக்காக ரிலையன்ஸ் குழுமம் என்விடியா நிறுவனத்திடம் இருந்து செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செமி கண்டக்டர்களை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் ரிலையன்ஸ் மற்றும் என்விடியா நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டன. அப்போது என்விவிடியாவின் ஏஐ மாநாடு மும்பையில் நடைபெற்றது. அதில் முகேஷ் அம்பானியும் கலந்து கொண்டார். இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் குழுமம் கட்டமைக்கும் டேட்டா சென்டருக்கு என்விடியா நிறுவனம் பிளாக்வெல் ஏஐ பிராசஸர்களை வழங்க இருப்பதாக தெரிய வருகிறது.
அக்டோபர் மாதம் என்விடியா குழுமத்தின் ஏஐ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முகேஷ் அம்பானி இந்தியா இங்கிருந்து மாவை அனுப்பிவிட்டு ரொட்டியை இறக்குமதி செய்வது சரியாக இருக்குமா? என கேள்வி எழுப்பினார். அதாவது இந்தியா தனக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் தான் தயாரிக்க வேண்டும் என கூறினார்.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக டிஜிட்டல் ரீதியிலான உள்கட்டமைப்பு கொண்ட சிறந்த நாடாக இந்தியா இருக்கிறது என அப்போது முகேஷ் அம்பானி தெரிவித்தார் . கடந்த செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் குழுமம் மற்றும் என்விடியா குழுமம் இணைந்து இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைப்போம் என்றும் மிகப்பெரிய லாங்குவேஜ் மாடல்களை உருவாக்குவோம் என்றும் தெரிவித்திருந்தன.
மத்திய அரசு இந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறது. இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாயை செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவியாக வழங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது உலகளவில் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு டேட்டா சென்டர்கள் மிக முக்கியமானவை. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் டேட்டா சென்டர் அமைக்க முனைப்பு காட்டும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் அவற்றை முந்த திட்டமிட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications