இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை அளிக்க வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்த New Umbrella Entity (NUE) திட்டத்தின் கீழ் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரீலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்பிமீம், கூகிள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் உடன் கூட்டணி சேர்ந்து குளோபல் பேமெண்ட் சேவையை அளிக்க முடியு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியிடம் தற்போது ரிலையன்ஸ், டாடா, அமேசான், பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் தலைமையிலான 4 கூட்டணிகள் New Umbrella Entity பிரிவை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் நிதியியல் சேவை தரம் மற்றும் வர்த்தகத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் NUE திட்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 5 வருடத்தில் பல துறைகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் New Umbrella Entity வாயிலாகக் கூகிள், பேஸ்புக் உடன் இணைந்து ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் வாயிலாக விசா மற்றும் மாஸ்டர்கார்டு-க்கு இணையாகச் சர்வதேச பேமெண்ட் சேவைகளை அளிக்கத் திட்டமிட்டு வருகிறது.
குளோபல் பேமெண்ட் சேவை
முகேஷ் அம்பானியின் இந்தக் கனவு பேமெண்ட் சேவை நடைமுறைக்கு வந்தால், உலகில் எந்த நாடுகளுக்கும் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். குளேபல் பேமெண்ட் சேவையில் விசா மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இப்போட்டியைச் சமாளிக்கவே முகேஷ் அம்பானி கூகிள் மற்றும் பேஸ்புக் உடன் கூட்டணி வைத்துள்ளார்.
போட்டி அதிகம்
ரிலையன்ஸ், டாடா, அமேசான், பேடிஎம் ஆகிய 4 நிறுவனங்களின் தலைமையிலான கூட்டணியின் விண்ணப்பம் ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வரும் நிலையில், ரிலையன்ஸ் நிச்சயம் NUE உரிமம் பெறும் என நம்புகிறது. இதனை அடிப்படையாக வைத்து ரிலையன்ஸ் குளோபல் பேமெண்ட் துறையில் நீண்ட காலத் திட்டங்களைத் தீட்டி வருகிறது.
நிறுவன பங்கீடு
New Umbrella Entity-க்காகப் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்ஸ்ட்ரீஸ் 40 சதவீதமும், இன்பிபீம் அவென்யூ, பேஸ்புக், கூகிள் ஆகிய நிறுவனங்கள் தலா 20 சதவீத பங்குகளைக் கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தக் குளோபல் பேமெண்ட் சேவையை உருவாக்குவதில் ரிலையன்ஸ் கூகிள் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தைத் தான் அதிகளவில் நம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
டிஜிட்டல் பொருளாதாரம்
2025ஆம் ஆண்டில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் சுமார் 200 பில்லியன் டாலர் வரையில் உயரும் என மத்திய எலக்ட்ரானிக்ஸ் மறறும் இன்பர்மேஷன் டெக்னாலஜி அமைச்சகத்தின் பிப்ரவரி 27ல் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
2018 இந்திய பொருளாதாரத்தின் படி இது கிட்டதட்ட 8 சதவீத ஜிடிபி ஆகும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications