உலக நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் இருக்கும் போது சற்றும் எதிர்பார்க்காத விதமாக விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்ய அரசு உக்ரைன் மீது போர் தொடுத்து பெரும் பொருளாதார, வர்த்தகப் பின்னடைவுக்கு வழிவகுத்தது.
இந்தப் போர் காரணமாக முதலில் அதிகம் பாதிக்கப்பட்டது கச்சா எண்ணெய் தான். ஆனால் இதே கச்சா எண்ணெய்யில் தான் முகேஷ் அம்பானிக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு உருவாகி அதிக லாபம் பார்த்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு மத்தியில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவானது. இதனால் தள்ளுபடி விலையில் அதிகப்படியான கச்சா எண்ணெய்-ஐ வாங்கி, எரிபொருள் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு அதிகப்படியான சந்தை விலையில் விற்பனை செய்ததன் மூலம் அதிகப்படியான லாபத்தைப் பெற்றுள்ளார்.
பொருளாதாரத் தடை
ரஷ்யா மீது பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உட்படப் பல நாடுகள் தடை விதித்த நிலையில், ரஷ்யா அதிகப்படியான தள்ளுபடியில் கச்சா எண்ணெய்-ஐ விற்பனை செய்யத் துவங்கியது. இதேவேளையில் பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் டீசல் மற்றும் பிற எரிபொருளுக்கான தேவை அதிகமாக இருந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வைத்திருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தள்ளுபடி விலையில் அதிகப்படியான கச்சா எண்ணெய்-ஐ வாங்கி டீசல் மற்றும் நேப்தா ஆகியவற்றை அதிகப்படியான சந்தை விலைக்கு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது.
மெயின்டனன்ஸ் பணிகள்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிப்ரவரி, மார்ச் மாதம் தனது சுத்திகரிப்பு ஆலையில் முக்கியமான பகுதியை மெயின்டனன்ஸ் பணிகள் செய்யத் திட்டமிட்டு இருந்தது, ஆனால் புதிய வர்த்தக வாய்ப்பு உருவாகும் காரணத்தால் மெயின்டனன்ஸ் பணிகளை ஒத்திவைத்தது. இதனால் மூலம் மார்ச் காலாண்டில் இப்பிரிவில் அதிகப்படியான வர்த்தகத்தையும் லாபத்தையும் பெற்றது.
14 லட்சம் பேரல்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுத்திகரிப்பு ஆலையில் ஒரு நாளுக்கு 14 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புச் செய்ய முடியும், இதனால் இந்தச் சப்ளை டிமாண்ட் பிரச்சனையைப் பயன்படுத்திக் குறுகிய காலகட்டத்தில் அதிகளவிலான லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
வருவாய் அளவீடுகள்
மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் எண்ணெய் மற்றும் கெமிக்கல் வணிகப் பிரிவின் வருவாய் கடந்த ஆண்டு ரூ.1.01 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.1.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் எண்ணெய் எரிவாயு வணிகம் ரூ.848 கோடியில் இருந்து ரூ.2,008 கோடியாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar



Click it and Unblock the Notifications