இந்தியாவின் 2வது பணக்காரர் மற்றும் நாட்டின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தின் உரிமையாளராக இருக்கும் முகேஷ் அம்பானி-க்கு மத்திய அரசு உயர் தர பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் கௌதம் அதானிக்கு மத்திய புலனாய்வு அமைப்பினர் கொடுத்து விபரங்கள் அடிப்படையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது, இந்நிலையில் தற்போது முகேஷ் அம்பானிக்குக் கூடுதலான பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
Z+ பாதுகாப்பில் என்ன ஸ்பெஷல்..? இதேபோல் நீதா அம்பானி, கௌதம் அதானி ஆகியோருக்கு எந்த வகை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
முகேஷ் அம்பானி
மத்திய அரசு சார்ப்பில் ஏற்கனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு Z பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய புலனாய்வு அமைப்பின் கொடுத்த ஆபத்துக் காரணிகள் அடிப்படையில் இந்தப் பாதுகாப்பை Z plus ஆக உயர்த்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
Z+ பாதுகாப்பு
இந்தப் பாதுகாப்புத் தரத்தை உயர்த்தியதன் மூலம் கூடுதல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புக் காரணிகள் கருத்தில் கொள்ளப்படும், மேலும் இந்தப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான சம்பளத்தை முகேஷ் அம்பானி தரப்பில் இருந்து மத்திய அரசுக்குச் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதா அம்பானி
முகேஷ் அம்பானிக்கு 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக Z பாதுகாப்பு அளிக்கப்பட்டது, இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிக்கு Y+ பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இவை அனைத்தும் முகேஷ் அம்பானி-யின் பணத்தில் மட்டுமே அளிக்கப்படுகிறது.
கௌதம் அதானி
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி-க்கு சமீபத்தில் CRPF கமாண்டோக்களின் Z பிரிவு VIP பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. Z பிரிவு VIP பாதுகாப்பு சேவைக்குக் கௌதம் அதானி ஒரு மாதத்திற்குச் சுமார் ரூ.15-20 லட்சம் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CRPF அமைப்பு
இந்த Z பாதுகாப்பை பொதுவாக CRPF அமைப்பு தான் வழங்கும், தற்போது CRPF அமைப்பில் இந்தியாவில் சுமார் 119 பேருக்கு உயர் தர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 18 பேருக்கு Z plus பாதுகாப்பு, 27 பேருக்கு Z பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இவை அனைத்தும் மத்திய புலனாய்வு அமைப்பின் முடிவுகள் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது.
கமாண்டோ
தற்போது முகேஷ் அம்பானிக்கு அளிக்கப்படும் Z Plus பாதுகாப்பில் 40 - 50 கமாண்டோ அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள்
இதேபோல் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கும், அலுவலகத்திற்கும் துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள் பாதுகாப்பு அளிக்கப்படும். இதேபோல் முகேஷ் அம்பானி பயணத்தின் போது ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் அவருடைய வாகனத்திற்குப் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications