முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் போட்டி மிகுந்த குளிர்பான சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பெப்சி, கோகோ கோலா போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய சந்தையில் புதிய பிராண்டை கொண்டு வந்து வெற்றி பெறுவது என்பது எளிதான காரியமில்லை.
இந்த மாபெரும் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் முகேஷ் அம்பானி பல தசாப்தங்களாக பழமையான பிராண்ட் கேம்பா கோலாவை புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தி மக்கள் மனதை கவர்ந்து வர்த்தக ரீதியாக வெற்றி பெறுவது என்பது முற்றிலும் மாறுப்பட்ட ஒன்று.

கேம்பா கோலா-வை அறிமுகம் செய்யும் போதே பெரிய அளவிலான குறைவான விலைக்கு கொண்டு வந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இந்திய குளிர்பான சந்தையில் அதிகபட்ச பங்கை கைப்பற்றும் நோக்கத்துடன் முக்கியமான பணியில் தற்போது இறங்கியுள்ளார்.
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலத்திலும், அனைத்து கிராமங்களிலும் கேம்பா கோலா கிடைக்க வேண்டும் இதற்கு உற்பத்தியை வேகமாக அதிகரிக்க வேண்டும், இதேவேளையில் அனைத்து வடிவத்திலும் குளிர்பானத்தை மக்கள் கையில் கொடுக்க வேண்டும்.
இதை சாத்தியப்படுத்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் காளிமார்க் பிராண்டு உடன் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக ஒப்பந்தம் செய்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இதை தொடர்ந்து இலங்கை நிறுவனத்துடன் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

இலங்கை நாட்டின் மூத்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பீவரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக முரளிதரனின் நிறுவனம் அலுமினியம் கேன்களில் கேம்பா கோலாவை பேக்கிங் செய்து விநியோகம் செய்ய உள்ளது.
சிலோன் பீவரேஜஸ் நிறுவனம் வரும் காலத்தில் பேக்கிங் பணிக்காக பேக்கேஜிங் ஆலையை இந்தியாவில் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் வரையில், சிலோன் பெவரேஜஸ் இலங்கை தொழிற்சாலையில் இருந்து டின்னில் அடைக்கப்பட்ட காம்பா கோலா தயாரித்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் ப்யூர் டிரிங்க்ஸ் குழுமத்திடமிருந்து காம்பா கோலாவை 2022 இல் வாங்கியது. அதன் பிறகு ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் இந்த பிராண்டிற்கு புதிய தோற்றத்தைக் கொடுத்து சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தியது. முதல் கட்டமாக இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட தற்போது நாட்டின் பல பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications