ஜாம்நகர்: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, தனது திருமணத்திற்கு முன்னதாக நடத்தப்படும் விழாக்களுக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த தனது தாயார் நீதா அம்பானிக்கு நெகிழ்ந்து பாராட்டுக்களை தெரிவித்தார்.
முகேஷ் அம்பானியின் மூத்த மகன் மற்றும் மகளின் திருமணம் மும்பை ஜியோ வோல்டு சென்டரிலும், உத்யபூர் மாளிகையிலும் நடைபெற்றது. ஆனால் அனந்த் அம்பானி திருமணம் கொஞ்சம் ஸ்பெஷல்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கிய 2000 ஏக்கர் காட்டில் இதுவரையில் அம்பானி குடும்பமும், ரிலையன்ஸ் ஊழியர்கள் மட்டுமே சென்ற நிலையில், முதல் முறையாக வெளியுலகத்திற்கு திறக்கப்பட்டு உள்ளது.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் இயற்கை மற்றும் விலகுங்குள் மீதான காதல் பற்றி வனந்திரா மூலம் உலகமே அறிந்தது. இந்த நிலையில் அம்பானி குடும்பம் கடந்த 20 வருடத்தில் உருவாக்கிய காடு மற்றும் அனந்த் அம்பானி காப்பாற்றி, பாதுகாத்து வரும் விலங்குகள் மத்தியில் நடக்கும் இந்த திருமணத்தின் ஏற்பாடுகள் மிகவும் கடினமானது, சவாலானது.
இந்த நிலையில் முதல் நாள் நிகழ்ச்சியில் பேசிய அனந்த் அம்பானி, அம்மா, நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. இவை அனைத்தையும் உருவாக்கியது என் அம்மா தான், வேறு யாரும் இல்லை.
கடந்த நான்கு மாதங்களாக, என் அம்மா எதையும் பொருட்படுத்தாமல், தன்னலம் இல்லாமல் கடுமையாக உழைத்தார். அவர் ஒரு நாளைக்கு 18-19 மணி நேரம் வரை வேலை செய்து திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அம்மாவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவன் என கூறினார் அனந்த் அம்பானி.
மேலும், தனது சிறுவயது முதலே சந்தித்து வரும் உடல்நலக் குறைபாடுகளில் தனக்கு உறுதுணை அளித்த தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார். "என் தந்தை மற்றும் தாய் எப்போதும் என்னுடன் இருந்துள்ளனர். நான் ஏதாவது செய்ய நினைத்தால், அதை என்னால் செய்ய முடியும் என்று அவர்கள் என்னை பெரிய அளவில் ஊக்குவித்தனர் என்று அனந்த் அம்பானி கூறும்போது, அருகில் இருந்த முகேஷ் அம்பானி கண்கலங்கி கைதட்டி ஆதரவு தெரிவித்தார்.
அனந்த் அம்பானியின் இந்த உருக்கமான பேச்சு விழாவில் கலந்து கொண்டிருந்தவர்களையும் நெகிழச் செய்தது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications