சென்செக்ஸ் சரிவுக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. இன்று காலை 1,500 புள்ளிகள் சரிவு என கட்டுரை எழுதி முடிப்பதற்குள், சென்செக்ஸ் 2,450 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.
இப்படி ஒரு பக்கம் சென்செக்ஸ் மரண அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது என்றால், மறு பக்கம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பெரிய நிறுவனங்களும் பயங்கரமாக அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.
அதில் அதிக அடி வாங்கி இருக்கும் கம்பெனி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். அங்கிருந்தே தொடங்குவோம்.
10 லட்சம் கோடி
கடந்த டிசம்பர் 2019-ல், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Capitalization) 10 லட்சம் கோடி ரூபாய் என்கிற இமாலய சாதனையைச் செய்தது. அப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கை தூக்கி வைத்து கொண்டாடாமல் இருந்தவர்களே இல்லை எனலாம்.
பங்கு விலை
ஆனால் இன்று, கதை அப்படியே தலை கீழாக இருக்கிறது. ஒட்டு மொத்த பங்குச் சந்தையும் பலமாக அடி வாங்கிக் கொண்டு இருப்பதால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் பங்கு விலை சுமாராக 1,125 ரூபாய்க்கு வந்து இருக்கிறது. இதில் என்ன சரிவு என்று கேட்கிறீர்களா..?
உச்ச விலை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் உச்ச விலை 1,617 என்கிற உச்ச விலையை, கடந்த 20 டிசம்பர் 2019-ல் தான் தொட்டது. ஆனால் இப்போது 1,125 ரூபாய் என்றால் 492 ரூபாய் சரிந்து இருக்கிறது. அதுவும் வெறும் 3 மாத காலத்தில் சரிந்து இருக்கிறது. இதை சந்தை மதிப்புடன் கணக்கிட்டால் எவ்வளவு சரிவு தெரியுமா..?
சந்தை மதிப்பு சரிவு
டிசம்பர் 2019-ல் 10 லட்சம் கோடி ரூபாய் என்றால், இப்போது 7.25 லட்சம் கோடி ரூபாய் தான் சந்தை மதிப்பாக இருக்கிறது. ஆக 10.00 - 7.25 = 2.75 லட்சம் கோடி ரூபாய் நம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு காணாமல் போய் இருக்கிறது. ரிலையன்ஸ் போன்ற மிகப் பெரிய இந்திய கார்ப்பரேட் ஜாம்பவான்களுக்கே இந்த அடி என்றால் குட்டி கம்பெனிகளின் கதி..?
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications