ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டு இருப்பது சமூக வலைத்தளத்தில் கடுமையான விமர்சனத்தை அம்பானி குடும்பமும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகமும் எதிர்கொண்டு வருகிறது.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்தி இந்த அணியின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருப்பது மட்டும் அல்லாமல் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இதன் எதிரொலியாக ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 1.5 லட்சம் இன்ஸ்டாகிராம் பாலோவர்களை மும்பை இந்தியன்ஸ் இழந்துள்ளது. இந்த எதிர்பாராத முடிவு மும்பை இந்தியன்ஸ் ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றம் அடைய செய்துள்எளது.
உலக கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்த நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது ஐபிஎல் போட்டிக்காக தான். அதுவும் குறிப்பாக சிஎஸ்கே அணிக்காக இந்த வருடம் தோனி விளையாட உள்ளது உறுதியான பின்பு கிரிக்கெட் ரசிகர்களும், தோனி வெறியர்களும் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியின் விளைவாக தற்போது கிட்டத்தட்ட 4 லட்சம் பாலோவர்களை இழந்து 12.8 மில்லியன் பாலோவர்களாக உள்ளது.
ரோஹித் சர்மா 2013 முதல் 2023 வரை தனது கேப்டன்சி கீழ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சுமார் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் அடையாளம், பேஸ்மெண்ட், தூண் என எப்படி வேண்டுமானாலும் கூறலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் ரோஹித் சர்மா இல்லையெனில் மும்பை இந்தியன்ஸ் அணி இல்லை என கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர்.
ரோஹித் சர்மா தலைமையின் கீழ் 158 ஐபிஎல் போட்டிகளில் சுமார் 56.33% போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ். ரோஹித்தின் பங்களிப்பு ஈடு இணையற்றது அவரை மாற்றுவதற்கான முடிவு அணியின் எனர்ஜியை குறைத்துள்ளது.
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அட்சய பாத்திரம்!! ஒவ்வொரு நொடிக்கும் காசு!!

T20 உலகக்கோப்பை இறுதி போட்டி: கோப்பையுடன் சேர்த்து இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்பிரைஸ்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications